(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, December 25, 2015

கீழக்கிடாரத்தில் புதிய பள்ளிவாசல் கட்டியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் 20 பேர் மீது வழக்குப்பதிவு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கிடாரத்தில் புதிய பள்ளிவாசல் கட்டியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது வாலிநோக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கடலாடி தாலுகாவுக்கு உள்பட்ட வாலிநோக்கம் அருகேயுள்ள கீழக்கிடாரத்தில் புதிதாக பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது தொடர்பாக அக்கிராமத்தை முஸ்லிம்கள் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. 

இதையடுத்து வாலிநோக்கம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் ஜமாஅத் தலைவர் முகம்மது பாரூக்(54)தரப்பினர் 10 பேர் மீதும், எதிர் தரப்பில் அதே கிராமத்தை சேர்ந்த அகமது அப்பா(74) உள்ளிட்ட 10 பேர் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தி; தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment