(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 14, 2015

கீழக்கரை ஜெட்டி பாலத்தில் கடலில் குளிக்க சென்ற மூவரில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!!

No comments :

கீழக்கரை ஜெட்டி பாலத்தில் மூன்று நபர்கள் கடலில் குளிக்க சென்றார்கள் அதில் இரண்டு நபர்கள் போதையில் இருந்ததக கூறப்படுகிறது.
கடலில் மூழ்கிய அவர்களை
பொதுமக்கள் மீட்டனர்

காணாமல் போன ஒருவரை காவல்துறை ஒத்துழைப்புடன் சேரான் தெருவில் உள்ள சங்குளி நபர்கள் காணாம்மல் போன நபரை தேடிபிடித்து கொண்டுவந்தார்கள்.



அவரை கீழக்கரை மருத்துவமணைக்கு கொண்டு சென்றார்கள் Dr. ஜவாஹிர் ஹுசைன் அவர்கள் முதலுதவி கொடுத்தும் பலனில்லாமல் அவர் உயிர் இழந்தார் அவரின் பெயர் சங்கர் வயது 22.

மற்ற இருவரும் சின்னசாமி வயது19 , முகம்மது காசீம் வயது 17 என்று தெரிய வந்தது.

கீழக்கரை ஜெட்டி பாலத்தில் பாதுகாப்பின்மையும், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கல் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


பொறுப்பிலிருப்பவர்களும், அதிகாரிகளும் ஜெட்டி பாலத்தில் போதிய பாதுகாப்பு அளித்திட பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.


செய்தி: திரு.சுஐபு, கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment