(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 13, 2015

ராமேசுவரம் இளைஞர் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டார்!!

No comments :

 ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தான் சோதனைச் சாவடியில் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசலிங்க பாண்டியன் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த காரை அவர்கள் நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்தில் 5 கிலோ கஞ்சா போதைப்போருள் மற்றும் 7 செல்லிடப்பேசிகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. வாகனத்தை ஓட்டியவர், ராமேசுவரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார்  (32) என்பதும், அவர் ஏற்கெனவே இலங்கைக்கு கஞ்சா கடத்திய வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது.




செல்வக்குமாரைக் கைது செய்த போலீஸார், கஞ்சா மற்றும் செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். அவரோடு கஞ்சா கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment