முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 19, 2015

சவூதி அரஏபியாவில் MEP வேலை வாய்ப்பு

No comments :
  • Employment Type:Full Time
  • Monthly Salary:Unspecified
  • Minimum Work Experience:5-10 Years
  • Minimum Education Level:Bachelors Degree
  • Listed By:Employer
  • Company Size:1001-5000 Employees
  • Career Level:Mid-level


Description:

Project Director – Degree in Electrical Engineering, 15 years work experience and has at least 6 years similar role in the Gulf.

Document Controller – Diploma or Degree holder of any field, Knowledge of document management standards, procedures and instructions, Document management systems knowledge, 3-5 years of experience with at least 2 years experience of documentation and processes within an construction based environment, Understanding and previous experience of bulk scanning and scanning systems, Candidates must have minimum of 6 months’ document control experience in an engineering environment within a Project Management team.

Procurement Engineer - Degree in Electrical Engineering, 5 – 8 years experience in construction with at least 3 years in a similar position in the Gulf. Spoken Arabic would be an advantage but is not essential.

Asst. Planning Engineer - Engineering Degree holder with at least 4 – 6 years experience in construction projects with at least 2 years experience in planning.

QA/QC Engineer - Graduate in Electrical Engineering, 4-5 years of experience out of which at least 2 years experience in the same role in the Quality department of a medium/large construction industry/contractor.

Quantity Surveyor Engineer - Bachelor of Science/Diploma in Quantity Surveying or Bachelor in Electrical Engineering, Studying for MRICS, 3 – 6 years experience on site in Quantity Surveying role.

Accountant - Graduate/Diploma in any field with majors in Accounting/Auditing. Knowledge of SAP or accounting software like Tally, Peachtree would be an added advantage, 2 - 4 years of experience in a similar role, preferably with some construction industry knowledge.

Design Engineer – Electrical - Graduate in Electrical Engineering, Must be proficient with Auto CAD 2004 or later version, Working knowledge of structural standards, specifications and codes, Experience or knowledge of Micro station is an advantage. 6 - 8 years of experience with at least 4 years should have worked in the same role. Experience in the Gulf preferred. Should have experience in producing precast engineering drawings using CAD. Experience with engineering consultants is an advantage.

Safety Supervisor - Graduate in engineering or equivalent, Must be a holder of NEBOSH General Certificate & NEBOSH Diploma 1 or equivalent, Experience around 5-6 years in the Safety department of a large/complex project involved in MEP engineering.

Site Engineer – Electrical - Bachelors Degree/Diploma in Electrical Engineering, 8 years on site experience with at least 3 years in a similar position. Experience in the Gulf with the ability to speak Arabic would be an added advantage.

Project Engineer – Electrical – Bachelors Degree in Electrical Engineering, 8 years on site experience with at least 3 years in a similar position. Experience in the Gulf with the ability to speak Arabic would be an added advantage.
Interested candidates who meet the requirements may send their CV along with salary expectation and notice period.

இணைப்பு: இங்கு க்ளிக் செய்யவும்

துபாய் - ல் Software Engineer Manager வேலை வாய்ப்பு

No comments :

Job Description

Within PSS should show strengths in one or many of the business functions / application handlingHighly efficient QA process implementation/ software delivery with expected results producedLeading CoE for testing /CoE for Technology

Company Description

In present firm ,Is a Government Contractor firm Mainly doing Kerala Water Authority...   Read full description

Additional Information

Last updated:
17/02/2015
Job type:
Full time
Position type:
Permanent
Vacancies:
1
Minimum experience:
More than ten years
Education:
Compulsory Education
Category:
Jobs in IT - Software Programming / Analysis
To apply: இங்கு கிளிக் செய்யவும்

சுற்றுச்சூழல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

No comments :
சுற்றுச்சூழல் விருது பெற தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற் றும் மேலாண்மை பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாகப் பணி யாற்றி வரும் கல்வி நிறுவனங் கள், தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் 2014-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருது கள் வழங்கப்பட உள்ளது.


சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு விருதுக்கு சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்பு ணர்வில் சிறந்து விளங் கும் கல்வி நிறுவனங்கள், கல் வியாளர்கள் மற்றும் தனி நபர் களும், சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் மேலாண்மை விருதுக்கு சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் மேலாண்மை யில் சிறந்து விளங்கும் தனி நபர்கள், சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் மேலாண்மை யில் சிறந்து விளங்கும் நிறுவ னங்கள் ஆகியோரும் தகுதி யுடையவர்கள்.

விண்ணப்பதாரர் தனி நப ராக இருப்பின் 18 வயது நிரம் பியவராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் தனி நபர் மற்றும் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கடந்த 3 ஆண்டுகளில் தனிநபர், நிறுவனம் செய்த பணிகள் மட்டுமே விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும். சுற் றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவின் கீழ் அறிவிக்கையில் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்த பணி களை மட்டும் நிறுவனங்கள் சமர்ப்பிக்கலாம்.

தனி நபராக இருப்பின் தமிழக அரசால் வேறு எந்த விருதுகளுக்கும் அனுப்பப் படாத பணிகளின் விவரம், அவற்றின் பயன் மற்றும் விவரங்களை அறிக்கையு டன் இணைத்தல் வேண்டும். தனிநபர் எந்த நிறுவனத்திலும் பணிபுரிபவராக இருத்தல் கூடாது. ஆனால் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் தனி நபர் செய்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து விண் ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பிரிவில் விண்ணப்பிக்கக்கூடிய தனி நபர், நிறுவனம் அறிவிக்கை யில் குறிப்பிட்ட காலகட்டத் தில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச்சார்ந்த பிரசு ரங்கள், பத்திரிக்கை குறிப்பு கள், திட்ட அறிக்கைகள், அத னால் ஏற்பட்ட பயன்பாடு, பயனாளிகள், பங்கு பெற் றோர் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம்பெற வேண் டும். களப்பணியை சம்பந்தப் பட்ட துறையின் அதிகாரிகள், தேர்வுக் குழுவினர் தணிக்கை செய்வார்கள். ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே தனி நபர், நிறுவனம் விண்ணப்பிக்க லாம். மூன்று பிரிவுக்கும் அப்பிரிவின் எதிரே குறிப்பிட் டுள்ள தகுதியுள்ள தமிழ் நாட் டைச்சார்ந்த நபர்கள், நிறு வனங்கள் மட்டுமே விண் ணப்பிக்க வேண்டும்.

மூன்று பிரிவுகளில் ஒவ் வொரு பிரிவிற்கும் என உள்ள தனித்தனி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண் டும். ஏற்கனவே சுற்றுச்சூழல் துறையால் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மீண்டும் விரு துகள் பெற விண்ணப்பிக்க இயலாது. பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பம் 6 நகல்க ளில் இயக்குநர், சுற்றுச்சூழல் துறைக்கான கேட்பு காசோலையுடன் 3 புகைப் படங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, தரை தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை -15 என்ற முகவரியில் அனைத்து பணி நாட்களிலும் வருகிற 25.02.2015 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெற் றுக் கொள்ளலாம். மேலும் இதற்கான விண்ணப்பத் தினை இத்துறையின் ஷ்ஷ்ஷ்.மீஸீஸ்வீக்ஷீஷீஸீனீமீஸீ௴.௴ஸீ.ஸீவீநீ.வீஸீ என்ற வலைதளத்தில் இருந்தும் படியிறக்கம் செய்து கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 27-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் நந்தகுமார் தெரி வித்தார்.


செய்தி: தினத்தந்தி

ராமநாதபுர மாவட்ட வேலை வாய்ப்பு முகாம்

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் டயாம்லர் நிறுவனம் மூலம் வருகிற 21, 22–ந்தேதி  சிவகங்கை வாரச் சந்தை ரோடு மன்னர் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது. 
இந்த முகாம் 18 வயது முதல் 26 வயது உடைய ஆண்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. கல்வித்தகுதி 12–ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி வரை. இணைப் பயிற்சியாளர் பதவிக்கு 36 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். ஊதியம் மாதம் ரூ.9,200 வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் வேலை தேடுபவர்கள் மட்டும் இதில் கலந்துகொள்ளலாம்.

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் ஸ்ரீமுத்தால பரமேசுவரி அம்பாள் கோயிலில் தேரோட்டம்

No comments :
மகா சிவராத்திரித் திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் அருள்மிகு முத்தால பரமேசுவரி அம்பாள் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
 ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தால பரமேசுவரி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரித் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தஆண்டு விழா, கடந்த 9ஆம் தேதி காப்புக்கட்டு மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.   
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அருள்மிகு முத்தால பரமேசுவரி அம்பாள் தேர்நிலைக்கு சென்றதும் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.
 இந்தத் தேரினை, ராமநாதபுரம் ஆயிர வைசிய மகாஜன சபையின் தலைவர் கே.கே. நாராயணன், செயல் தலைவர் எம்.எஸ். கேசவன் தலைமையிலான சபை
நிர்வாகிகளும், கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் அறங்காவலர் குழுவினரும் வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தினை துவக்கி வைத்தனர்.
ரத வீதிகளின் வழியே நடைபெற்ற தேரோட்டத்தின்போது, ஆயிர வைசிய மகளிர் குழுவினர் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியபடி அம்மனை வரவேற்று அழைத்து வந்தனர்.
விழாவில், ராமநாதபுரம் அரிமா சங்கத் தலைவர்கள் எம். சண்முகசுந்தரம், அபர்ணா வெங்கடாஜலம், நகை வியாபாரிகள் சங்க இணைச் செயலர் பார்த்தீபன், தன்னார்வ
ரத்த தான அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வேணு. சதீஷ்குமார், ஜெ.சி.ஐ. அமைப்பின் பொருளாளர் மகாலிங்கம் உள்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும்
கலந்துகொண்டனர்.  தொடர்ந்து, வியாழக்கிழமை பால்குடத் திருவிழாவும், அன்று இரவு அம்மன் சயன அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலாவும்
நடைபெறவுள்ளன. வெள்ளிக்கிழமை உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.


செய்தி: தினமணி