முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 19, 2015

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கோட்டை அருகே சாலை விபத்து, 3 மாணவிகள் உட்பட 5 பேர் பலி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கோட்டை அருகே சாலை விபத்து, 3 மாணவைகள் உட்பட 5 பேர் பலி!!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவிகள் 3 பேர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 19 வயதுடைய மாணவிகள் 3 பேர் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வினோதினி (19). பரமக்குடி அருகே உள்ள வீரானூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கெளசல்யா (19), லட்சுமி (19). இவர்கள் மூன்று பேரும் தோழிகள். பரமக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இவர்கள் மூன்று பேரும் படித்து வந்தனர். தனியார் பேருந்தில் இவர்கள் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

 
இன்று காலையும் மூன்று மாணவிகளும் கல்லூரி செல்வதற்காக ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி சென்ற தனியார் பேருந்தின் முன்புறத்தில் ஏறினர். பரமக்குடி அருகே உள்ள கீழக்கோட்டை என்ற இடத்தில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன் படுவேகமாக மோதியது.
இதில், பேருந்தில் முன்பகுதியில் இருந்த கல்லூரி மாணவிகள் கெளசல்யா, லட்சுமி, வினோதினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனின் டிரைவர் முகமது அப்துல்லா (45) மற்றும் முருகன் ஆகியோரும் பலியானார்கள். மேலும் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாணனன் நேரில் சென்று விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

சாலை விபத்தில் மூன்று கல்லூரி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

-
இரா.மோகன்
படங்கள்: உ. பாண்டி

-விகடன் செய்திகள்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 19) துவங்கியது!!

No comments :

ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 11,827 பள்ளிகளிலிருந்து 10.72 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதுவோரில் 5.40 லட்சம் பேர் மாணவர்கள், 5.32 லட்சம் பேர் மாணவிகள் ஆவர்.
தேர்வுப் பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இத் தேர்வுக்காக 5,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
(கோப்பு படம்)
கடந்த ஆண்டை விட 33,816 மாணவ, மாணவிகள் நிகழாண்டு கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். தமிழ் வழியில் 7 லட்சத்து 30 ஆயிரம் பேரும், தனித்தேர்வர்களாக 50,429 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
241 சிறைவாசிகள்: மேலும், 241 சிறைவாசிகளும் இத்தேர்வை எழுதுகின்றனர். பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் 33 பேரும், கோவை மத்திய சிறையில் 97 பேரும், புழல் மத்தியச் சிறையில் 111 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ் 2 தேர்வுடனேயே நிகழாண்டு 10-ஆம் வகுப்புத் தேர்வும் நடத்தப்படுகிறது.
ஆனால், இரண்டு வகுப்புகளுக்குமான தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறாத வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் புத்தகத்தின் பக்கங்கள்: தமிழ், ஆங்கிலம், பிற மொழிப் பாடங்களுக்கு 22 பக்கங்கள் கொண்ட கோடிட்ட விடைத்தாள் புத்தகங்கள் வழங்கப்படும்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் புத்தகங்கள் வழங்கப்படும். இதில், சமூக அறிவியல் பாடத்துக்கான விடைத்தாள் புத்தகத்தில் முதல் நான்கு பக்கங்களில் 4 வரைபடங்கள் இடம்பெற்றிருக்கும்.
9.15 மணிக்கே தொடங்கும்: பிளஸ் 2 தேர்வு வழக்கமாக காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. ஆனால், 10-ஆம் வகுப்புத் தேர்வு கடந்த ஆண்டு வழக்கமான நேரத்துக்குப் பதில் 45 நிமிஷங்கள் முன்னதாக 9.15 மணிக்குத் தொடங்கப்பட்டது.
கோடை வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்கூட்டியே தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல, நிகழாண்டும் 10-ஆம் வகுப்புத் தேர்வு காலை 9.15 மணிக்குத் தொடங்குகிறது.
முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்ததாக 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். காலை 9.30 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும்.
மாணவக்கண்மனிகளுக்கு எங்கள் முகவை முரசு அணி சார்பாக வாழ்த்துக்கள்.!!

அலெர்ட்-360 மொபைல்-ஆப் : ராமநாதபுரம் மாவட்ட போலீசில் அறிமுகம்!!

No comments :




சட்ட விரோத செயல்கள், பிரச்னைகளை பொதுமக்கள் தெரிவிக்க இந்தியாவிலேயே ராமநாதபுரம் மாவட்ட போலீசில் அலெர்ட்-360 அப்ளிகேஷன் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  சட்டவிரோத செயல்கள் குறித்து தெரிவிக்க ராமநாதபுரம் மாவட்ட போலீசில் ஹலோ போலீஸ்பொதுமக்கள் தகவல் மையம் துவங்கப்பட்டது. பொதுமக்கள் 24 மணி நேரமும் இந்த செல்போன் எண்ணில் பேசியோ, எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், இமெயிலில் தெரிவிக்கலாம் என எஸ்.பி., தெரிவித்தார்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள், பொதுமக்கள் பிரச்னை, போலீசாரின் செயல்பாடுகள் குறித்தோ, ரவுடி மற்றும் பெண்களை கேலி செய்தல்(ஈவ்டீசிங்), விபத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி, பொதுமக்களுக்கு தெரியவரும் தகவல்களை போலீசிற்கு தெரிவிக்க வசதியாக ஹலோ போலீஸ்தகவல் மையம் கடந்த டிசம்பர் 12ல் துவங்கப்பட்டது. இதற்காக எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.   

பொதுமக்கள் 83000 31100 செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோ, எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்ப் மூலமாகவோ அல்லது   sஜீக்ஷீனீபீ.tஸீ@ஸீவீநீ.வீஸீ    என்ற இமெயில் முகவரியிலோ தெரிவிக்கலாம். அந்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு போலீசிலும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு அரை மணி நேரத்திற்குள் சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நடவடிக்கை குறித்து புகார் தெரிவித்தவருக்கும் பதில் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

இதுபோன்ற புகார்களை தெரிவிக்க தற்போது நவீன சாப்ட்வேர் வசதியை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அலெர்ட்-360 (கிலிணிஸிஜி  360) என்ற அப்ளிகேஷன் சாப்ட்வேரை கூகுள் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த அப்ளிகேஷன் ராமநாதபுரம் மாவட்ட கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் வசதியுள்ள ஸ்மார்ட் போன்களில் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த முடியும். அடுத்ததாக ஆப்பிள் சாப்ட்வேர்களிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் கால் செய்தால் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும், கால் செய்பவர்(புகார் செய்பவர்) எங்கிருந்து செய்கிறார் என்பது கம்ப்யூட்டர் அல்லது செல்போன் திரையில் தெரியும். அதன் மூலம் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் தெரிவித்து எளிதில் நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் போலீஸ் அதிகாரிகள், போலீஸ் ஸ்டேஷன்கள் குரூப்பில் கொண்டு வரப்பட்டு அலெர்ட் செய்யப்படும். அலெர்ட்-360 வைத்திருப்பவர்களும் எமர்ஜென்சி அலெர்ட் குரூப் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த குரூப்பில் உள்ளவர்களுக்கும் உடனடியாக புகார் அலெர்ட்டுகள் கிடைக்கும். சம்பவ இடத்திலிருந்து போட்டோ, வீடியோக்களையும் எடுத்து அனுப்பலாம். இந்த அப்ளிகேஷன் ஹலோ போலீஸ் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

போலீசார் எளிதில் நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வருபவர்கள் சம்பவ இட தகவல் தெரியவில்லை என்றால் கூட அங்கிருந்து கால் செய்தால் போதும், போலீசார் சம்பவ இடத்தை தெரிந்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்த அப்ளிகேஷன் நேற்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வசதியை நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., மயில்வாகனன் தொடங்கி வைத்தார். கமுதி ஏஎஸ்பி சேகர் தேஷ்முக், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன், பிரண்ட்ஸ் டூ சப்போர்ட் ரத்ததான ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினகரன்



அஞ்சல் நிலையங்களில் பாரத் மொபைல் விற்பனை மார்ச் 31 ஆம் தேதி நிறைவடைகிறது

No comments :
அஞ்சல் நிலையங்களில் ரூ. 1,999 மதிப்புள்ள பாரத் மொபைல் விற்பனை இம்மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது என, ராமநாதபுரம் மாவட்ட அஞ்சல்துறைக் கண்காணிப்பாளர் என்.ஜே. உதயசிங் கமுதியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்தது: அகில இந்திய அஞ்சல் துறை அமைச்சகம் உத்தரவில், தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்களில் பாரத் பென்டா மொபைல் என்ற செல்லிடப்பேசி விற்பனை நடைபெற்று வருகிறது.

அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த செல்லிடப்பேசி, மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி தலைமை அஞ்சல் நிலையங்களிலும் மற்றும் கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை, ராமேசுவரம் பகுதியிலுள்ள அஞ்சல் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை மார்ச் 31 வரை மட்டுமே நடைபெறும்.

குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் நிலையங்களில் முதல் நாள் ரூ. 500 முன்பணம் செலுத்தி, மறுநாள் மீதப்பணம் செலுத்தி செல்லிடப்பேசியை பெற்றுக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றார்.