முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 18, 2015

உம்ரா புனிதப்பயணம் முடித்து துபாய் திரும்பிய பேருந்து விபத்துக்குள்ளானது!! 3 இந்தியர்கள் பலி, 53 பேர் காயம்!!

No comments :

அபுதாபி: துபாயை சார்ந்த இந்தியக் குழு ஒன்று சவுதி அரேபியாவில் உம்ராவை முடித்து விட்டு சனிக் கிழமை அமீரகத்தை நோக்கி பேருந்தில் திரும்பி கொண்டிருந்த போது அவர்கள் பயணம் செய்த பேருந்து அல் குவைஃபாத் – அபுதாபி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை விபத்துக்குள்ளானது இதில் 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர் மேலும் 44 பேர் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர் .


விபத்தில் இறந்த மற்றும் காயமுற்ற அனைவரும் உம்ரா செய்துவிட்டு திரும்பியவர்கள் என அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.



பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோர உலோகத் தடுப்பில் மோதி பள்ளத்தில் உருண்டு விபத்திற்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



சனிக்கிழமை (16.05.2015) மாலை 3.30 மணியளவில் விபத்து நடந்த சிறிது நேரத்தில் விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையின் ஆகாய மார்க்க மீட்புக் குழுவும் அபுதாபியின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலன்ஸ்களும் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று அவசர கால உதவிகளை மேற்கொண்டு காயமடைந்தோருக்கு அபுதாபியின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையளித்து வருவதாக உள்துறை அமைச்சகத்தின் சாலை போக்குவரத்து துறை தலைவர் கலோனல் ஹமத் நஸீர் அல் பெலூசி தெரிவித்தார்.



ஓட்டுநரின் அதிக நேர வேலைப் பளுவின் அழுத்தமும் கவனக்குறைவும் பேருந்தின் டயர் வெடிப்புமே இவ்விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.



கனரக வாகன ஓட்டிகள் கவனமாகவும், சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் மேலும் வேகக் கட்டுப்பாடுகளின் படியும் வாகனம் ஓட்ட வேண்டுமென கலோனல் அல் பெலூசி தெரிவித்தார். தரமான டயர்களையும் நெடுஞ்சாலைகளில் செல்லும் முன்பும் வாகனத்தின் டயர்களை பரிசோதித்து செல்லவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநரும் மரணமடைந்தார்.







இரண்டு ஓட்டுநர் உட்பட 60 பேர் பயணம் செய்த அந்த பேருந்தில் குழந்தைகள் உட்பட குடும்பத்தினரும் பயணம் செய்துள்ளனர் .



காயமடைந்த 53 பேரில் யாரும் ஆபத்தான கட்டத்தில் இல்லை என பாதிக்கப் பட்டோருக்கான உதவிகளை செய்துவரும் இந்திய சமூக சேவகரான கே.வி.செரீப் தெரிவித்தார்.



விபத்தில் பலியான இரண்டாமவர் 46 வயது நிறைந்த M.அபுபக்கர் உம்ரா பயணத்திற்கான கோ ஆர்டிேனேட்டர் ஆவார். இவர் மெசெஞ்சராக குடியுரிமை மற்றும் வெளிவிவகாரத்துறையில் 2007 முதல் பணி புரிந்துள்ளார்.



மரணமடைந்த மூன்றாமவர் 41 வயதுடைய கல்லரக்கள் முகமது இந்த வேராக் குழுவின் தலைவர் ஆவார். இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.இவர் X-ray டெக்னீசியனாக துபை ரஷீத் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.



இந்த குழு மே மாதம் 6ம் தேதி துபையில் இருந்து உம்ராவுக்கு புறப்பட்டது. விபத்து நிகழாமல் இருந்தால் சனிக்கிழமை மாலை துபாய் திரும்பியிருப்போம் என அபுபக்கர் தெரிவித்தார்.



மரணமடைந்தோரின் உடல்கள் மதினத்துள் ஜயாத் மருத்துவமனையில் வைக்கப்பட்டு பின் ஷேக் கலிஃபா மெடிக்கல் சிட்டிக்கு ஞாயிரு இரவு கொண்டு செல்லப் பட்டது.



அரசு நடைமுறைகள் முடிந்து விட்டால் திங்கள் கிழமை அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். காயமடைந்தோர் அல்மப்ராக் மற்றும் மதீனத் ஜயாத் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டனர். பெரும்பாலோனோர் ஞாயிறு மாலையே சிகிச்சை முடிந்து வெளியேறிவிட்டனர். காயமுற்ற ஒரு வயது குழந்தை அல் அய்ன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.


துபாய் Al Futtaim Motors நிறுவனத்தில் Sales Admin Assistant வேலை வாய்ப்பு!!

No comments :
Sales Admin Assistant 
Al Futtaim Motors - Dubai

Al Futtaim Motors was established in 1955 and is the exclusive distributor of Toyota, Lexus, Hino trucks and Toyota Material Handling equipment in the UAE. Al Futtaim Motors operates a large network of showrooms and service centres, offering world class service at every touch point of the customer journey.
For details and apply : http://goo.gl/916CuW
Salary: AED6,500.00 /month

TO APPLY: CLICK HERE

இராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கலந்தாய்வுக்கூட்டம்!!

No comments :


இராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்க்கு மாண்புமிகு திரு.சுப.தங்கவேலன் M,l,a அவர்கள் தலைமை தாங்கினார்.

மாவட்டகழக செயலாளர் திருமிகு.சுப.த.திவாகரன்.M,A.அவர்கள்முன்னிலை வகித்தார்.




இந்த கூட்டத்திற்க்குமாவட்ட துனைசெயலாளர்திரு.கருப்பையா அவர்கள், நகர்கழக செயலாளர் திரு.சேது.கருணாநிதி அவர்கள் மாவட்ட மாணவரணி துனை அமைப்பாளர்திரு.M.P.துரைச்சாமி மற்றும் மாவட்ட. ஒன்றிய.நகர்கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள்.துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில், சமீபத்திய தமிழக அரசியல் நிலைப்பாடுகள், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆவணப்பணிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

செய்தி: இராமநாதபுர திமுக இளைஞர் அணி

36 வயதினிலே - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: ஜோதிகா, ரகுமான், ஜெயப்பிரகாஷ், டெல்லி கணேஷ், அபிராமி, தேவதர்ஷினி

ஒளிப்பதிவு: திவாகரன்

இசை: சந்தோஷ் நாராயணன்

வசனம்: விஜி தயாரிப்பு: சூர்யா

கதை - இயக்கம்: ரோஷன் ஆன்ட்ரூஸ்

ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும், சினிமா வியாபாரத்தைத் தாண்டி இந்த சமூகத்துக்கு ஏதாவது நல்ல விஷயங்களைத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஒரு படத்தைத் தந்த தயாரிப்பாளர் சூர்யாவுக்கும், இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸூக்கும் முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுவோம்.

இப்படியொரு கவுரவமான மறுபிரவேசம் வேறு எந்த நடிகைக்காவது அமையுமா தெரியவில்லை. வெல்கம் ஜோதிகா! கணவன், குழந்தை, குடும்பத்துக்காக தன் சுயத்தை இழந்து நான்கு சுவர்களுக்குள் முடங்கி, அதே கணவன், குழந்தையால் ஒதுக்கப்படும் ஒரு பெண், மீண்டும் எப்படி தன்னைத் தேடி.. ஒரு பெரிய கவுரவத்தைப் பெறுகிறாள் என்பதுதான் 36 வயதினிலே படத்தின் கதை.

முழுக்க நகரம் சார்ந்த கதைதான். ஆனால் அதில் இயற்கை விவசாயம், உணவுப் பழக்கம், பெண்ணுக்கு கவுரவம் என பல விஷயங்களைத் தொட்டிருக்கிறார் இயக்குநர்.ஜோதிகா அளவான, அழுத்தமான நடிப்பின் மூலம் நீண்ட நேரம் நினைவுகளை விட்டு அகல மறுக்கிறார். 36 வயசானா ஆன்ட்டியாடி? என மகளிடம் ஆதங்கப்படுவதிலிருந்து, குடியரசுத் தலைவர் தன்னைக் கேட்கப் போகும் அந்தக் கேள்வி என்னவாக இருக்கும் எனத் தெரியாமல் தத்தளிப்பது, கணவன் தன்னை வெறுத்து தவிர்க்கப் பார்ப்பதை உணர்ந்து தவிப்பது, 'என் மகளே என்னை தன்னோட அம்மான்னு சொல்லிக்க வெக்கப்படறாடி' என தோழியிடம் குமுறுவது.... அத்தனை இயல்பான நடிப்பு.



நாம் பயன்படுத்தும் உணவுகள் எத்தனை நச்சுத் தன்மை கலந்தவை என்பதை விளக்கும் அந்த காட்சியில் ஜோதிகாவின் கம்பீரம் சிலிர்க்க வைக்கிறது. அந்த ஒரு காட்சி இந்த சமூகத்தின் மீதான பல சாட்டையடிகள். இனி நிறைய மொட்டை மாடிகள் பசுமை இல்லமாக மாற வாய்ப்பிருக்கிறது.


ஜோதிகாவின் கணவராக வரும் ரகுமான், இடைவெளியை மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறார். 'அயர்லாந்தில் வேலைக்காரி வைத்துக் கொண்டால் ஏக செலவு.. நல்ல சாப்பாடு இல்ல.. அதான் உனக்கு விசா ஏற்பாடு பண்ணிட்டேன்' என்று அவர் சொல்லும் போதே, 'இந்தாளை வெளுக்கணும்டா' என்று தோன்றுகிறது. அத்தனை எதார்த்தம். மகளாக நடித்திருக்கும் அந்த சிறுமியின் மீது பார்வையாளர்களுக்கு பாசத்துக்கு பதில் வெறுப்புதான் வருகிறது. கணவன் மனைவி சண்டைக்குள் குழந்தைகளை எப்படி பகடையாக்கி உருட்டுகிறார்கள் என்பதை மிக இயல்பாகக் காட்டியிருக்கிறார்
இயக்குநர்.

டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், அந்த சமையல் பாட்டி, அந்த அலுவலக அக்கப் போர் அம்மணிகள்.. அனைவருமே உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணனின் உறுத்தாத இசையும் வலிந்து திணிக்கப்படாத அந்த இரண்டு பாடல்களும் படத்துக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. திவாகரனின் ஒளிப்பதிவு இன்னொரு ப்ளஸ். இடைவேளைக்குப் பிந்தைய சில காட்சிகளில் பிரச்சார நெடி தெரிந்தாலும், இருந்துவிட்டுப் போகட்டுமே. இந்த மாதிரி படங்களை உற்சாகப்படுத்தத் தவறினால், அந்தப் பாவம் தமிழ் சினிமா ரசிகர்களை சும்மா விடாது!


விமர்சனம்: ஒன் இண்டியா

பாம்பன் பாலத்தில் ரயில் படியில் நின்று வேடிக்கை பார்த்தவர் கீழே விழுந்து பலி!!

No comments :
மதுரையிலிருந்து நேற்று அதிகாலை ராமேஸ்வரம் கிளம்பிய பாசஞ்சர் ரயிலில் தென்காசியை சேர்ந்த இசக்கி (24) உள்பட 37 பேர் தீர்த்தமாடுவதற்காக சென்றனர். பாம்பன் பாலத்தில் ரயில் சென்றபோது படியில் நின்று வேடிக்கை பார்த்த இசக்கி, திடீரென நிலைதடுமாறி கடலில் விழுந்தார். உடன் வந்தவர்கள் இதை கவனிக்கவில்லை. ராமேஸ்வரம் ஸ்டேஷனில் ரயில் நின்றபின்பு இசக்கியோடு வந்திருந்த அனைவரும் அக்னிதீர்த்த கடற்கரைக்கு சென்று கடலில் குளித்தனர். பின்னர் கோயிலுக்கு புறப்பட்டபோது இசக்கி இல்லாததை கண்டுபிடித்தனர்.


அவரை காணவில்லை என ராமேஸ்வரம் கோயில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதற்கிடையே பாம்பன் கடற்கரையில் சடலம் கரை ஒதுங்கியிருப்பதாக மண்டபம் மரைன் போலீசாருக்கு மீனவர்கள் தகவல் கொடுத்தனர். இதுபற்றி அவர்கள் ராமேஸ்வரம் கோயில் போலீசாரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்த உறவினர்கள் காணாமல் ேபான இசக்கி உடல் என தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


செய்தி: தினகரன்