முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 28, 2015

ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது!!

No comments :
ராமநாதபுரம் : ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.



விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராம மூர்த்தி. கடந்த 3 ம் தேதி டூ வீலர் ஸ்டாண்டில் நிறுத்தி சென்றார். இந்த வாகனம் காணவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தார். பைக் ராமநாதபுரத்தில் இருந்தது . இந்த பைக்கை பெற வேண்டுமானால் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் அளிக்க வேண்டும் என இன்ஸ்பெக்டர் முருகன் கூறினார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராமமூர்த்தி புகார் கொடுத்தார். 


இதன்படி இன்ஸ்பெக்டர் முருகன் ரூ 3 ஆயிரம் பெறும் போது டி.எஸ்.பி., தங்கவேல், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் , ஜானகி ஆகியோர் கொண்ட படையினர் கைது செய்தனர்.

மேலும் லஞ்சமாக கொடுத்த ரூ.3 ஆயிரம் மற்றும் முருகனின் பையில் இருந்த பத்தாயிரத்து ஐநூறு ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தி: திரு கார்த்திக், இராமநாதபுரம் - தினசரிகள் வழி.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக புதிய கட்டிடம், முதல்வர் திறந்து வைத்தார்.!!

No comments :

ராமநாதபுரத்தில் நீண்ட காலமாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது.

இது சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலும்,

இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அரசுக்கு தேவையில்லாத வாடகை செலவினங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் எண்ணத்துடனும் கடந்த 2012 ம் வருடம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றகுழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.முனைவர். M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் வெட்டுத்தீர்மானம் வாயிலாக இது சம்பந்தமான விரிவானதொரு கோரிக்கையை தமிழக அரசுக்கு வைத்ததன் அடிப்படையில் தமிழக மக்களுக்கு சிறப்பான முறையில் சேவை செய்துவரும் தமிழக அரசு இக்கோரிக்கையினை பரிசீலித்து ஆய்வு செய்து பல அரசு நடவடிக்கைகளுக்குப்பின் ராமநாதபுரம் பாரதிநகர் அருகில் உள்ள “டி” பிளாக் பேருந்து நிறுத்தம் அருகில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் எதிரில் இடம் தேர்வு செய்யப்பட்டு இம்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, ரூ.1.50 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டது.


புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தில் வேலை வாய்ப்பை பதியவும், பயிற்சி வகுப்புகள் நடத்தவும், தனியார் துறையினர் நேர்முகத்தேர்வு நடத்தவும் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 1,55,197 பதிவுதாரர்களுக்கும், இனி பதிவு செய்ய வருபவர்களுக்கும் இப்புதிய கட்டடம் வசதியாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த புதிய கட்டடத்தை சென்னையில் இருந்தவாறு "வீடியோ கான்பரன்சிங்' மூலம் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

ராமநாதபுரத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாகவே தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரும், பயனாளிகள் சிலரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அப்போது ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.க.நந்தகுமார் IAS அவர்களும்,
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களும்,
முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.முருகன் எம்.எல்.ஏ அவர்களும், மண்டபம் பேரூராட்சி தலைவர் தங்க மரைக்காயர் அவர்களும்,
பட்டிணம்காத்தான் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராமருது மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் நாகேஸ்வரி சண்முகவேல், பொதுப் பணித்துறை பொறியாளர்கள் எம்.மணி, உதவி செயற்பொறியாளர் டி.குருதிவேல்மாறன் மற்றும்
வேலைவாய்ப்பு அலுவலக மதுரை மண்டல இணை இயக்குனர் லதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹரிஹரன்பாபு மற்றும் தனபாலகிருஷ்ணன், நாகவினோத் உட்பட அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்

மதுரை-ராமநாதபுரம் பேருந்து மீது லாரி மோதி விபத்து, ஒருவர் இறப்பு!!

No comments :


பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் விலக்கு ரோட்டில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பயணி ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

 மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. இது பரமக்குடியை கடந்து வாகைக்குளம் விலக்கு சாலையில் வந்த போது பின்னால் வந்த லாரி, பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த முனியாண்டி மகன் நாகராஜின் (36) கை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 விபத்தில் பலியான நாகராஜ் மதுரையில் உள்ள தனியார் ஆட்டோமொபைல் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம் போல் இவர் வார விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வருவதற்காக மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் நாகராஜ் மனைவி சூரியா அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


துபாய் Lifco குழும நிறுவனங்களில் store keeper வேலை வாய்ப்பு!!

No comments :
Need store keeper urgently
Lifco Group of companies - Dubai


Should have good communication skills
Fluent in English
should have UAE experience in store keeper field
Attractive salary
Salary: AED4,000.00 /month
Required experience:
  • Store keeper: 2 years
TO APPLY: CLICK HERE

இனிமே இப்படித்தான் – தமிழ் திரை விமர்சனம்!!

No comments :


நடிகர்கள்: சந்தானம், ஆஸ்னா சவேரி, அகிலா கிஷோர், விடிவி கணேஷ், தம்பி ராமய்யா, நரேன்
ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன்
இசை: சந்தோஷ்
தயாநிதி தயாரிப்பு: சந்தானம்
இயக்கம்: முருகானந்த்

பொதுவாக காமெடி நடிகர்கள் ஹீரோக்களாகும்போது, ஒரு பட அதிசயம் மாதிரி, முதல் படம் ஓடும்.. அடுத்தடுத்த படங்கள் ஆளைக் காணாமலடித்துவிடும். ஆனால் சந்தானம் கொஞ்சம் விதிவிலக்கு போலிருக்கிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் ஓரளவு வெற்றியை ருசித்தவருக்கு, இனிமே இப்படித்தான் இன்னும் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது

இனிமே நான் இப்படித்தான் என்று தைரியமாக காமெடி ஹீரோவாக அவர் தொடரலாம். கதை அப்படியொன்றும் புதியதல்ல. வேலையேதும் இல்லாமல் அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு, அம்மாவின் செல்லப் பிள்ளையாக ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் சந்தானத்துக்கு 3 மாதத்துக்குள் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என ஜோசியர் கூறிவிடுகிறார். பெண் பார்க்கும் படலம் தொடங்குகிறது. எந்தப் பெண்ணும் செட்டாகவில்லை. நண்பர்கள் ஆலோசனையின்படி, அழகான பெண்ணாகப் பார்த்து காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கிறார். ஊரெல்லாம் தேடி, ஆஸ்னா சவேரியைக் குறி வைக்கிறார். விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஆனால் ஆஸ்னா பக்கமிருந்து கிரீன் சிக்னல் இல்லை.


இன்னொரு பக்கம் பெற்றோர் அகிலா கிஷோரைப் பார்த்து நிச்சயித்து விடுகின்றனர். நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் ஆஸ்னா காதலுக்கு சம்மதிக்க, அங்கே ஆரம்பிக்கிறது சந்தானத்துக்கு சோதனை. நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் உண்மையைச் சொல்ல முயலும்போதெல்லாம் ஒரு தடங்கள்... கடைசியில் காதலியைக் கைப்பிடித்தாரா... நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்தாரா? என்பதை நிச்சயம் திரையில் பாருங்கள்.

இரண்டரை மணி நேரம்... சிரித்துக் கொண்டே ஒரு படத்தைப் பார்க்க முடியும் என்றால், இனிமேல் இப்படித்தானை தைரியமாகப் பரிந்துரைக்கலாம்.

சந்தானம் தன்னை காமெடியன் இமேஜிலிருந்து முற்றாக வெளியேற்றிக் கொள்ள பெரும் முயற்சி எடுத்திருப்பது படத்தில் தெரிகிறது. உடல் மொழியில் ஒரு நாயகனாக அவர் ஜெயித்திருக்கிறார். நடனம், சண்டை, ரொமான்டிக் டூயட் என அனைத்திலுமே பக்கா. அதேநேரம், முன்னிலும் பலமடங்கு காமெடியை ரசிகனுக்கு விருந்தாகத் தரவும் அவர் தவறவில்லை.

உணவக கழிப்பறையில் லொள்ளு மனோகரும் சந்தானமும் பண்ணும் களேபரத்தில் அரங்கமே அதிர்கிறது என்றால் மிகையல்ல. காதலியாக வரும் ஆஸ்னா சவேரி, நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக வரும் அகிலா கிஷோர் இருவருமே கவர்கிறார்கள். அகிலா கிஷோர் இன்னொரு நயன்தாரா மாதிரிதான் தெரிகிறார் இந்தப் படத்தில். சந்தானத்துக்கு லவ் ஐடியாக்கள் கொடுக்கும் 'துருப்பிடிச்ச தொண்டைக்காரன்' விடிவி கணேஷ், 'மூக்குக்குப் பாலீஷ் போடும்' தம்பி ராமைய்யா, ஒரே ஒரு காட்சியில் வந்து சாமியாடிவிட்டுப் போகும் சிங்கமுத்து, மிலிட்டெரிக்காரராக வரும் பெப்சி விஜயன், டென்சன் அப்பா ஆடுகளம் நரேன், 'டைல்ஸ் பதிச்ச தலையன்' கூல் சுரேஷ்.. என நடித்த அத்தனை பேருமே ரசிக்க வைக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதியின் இசை கவனிக்க வைக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு இன்னொரு ப்ளஸ். முருகன் - பிரேம் ஆனந்த் என்ற இரட்டையர் முருகானந்த் என்ற பெயரில் இயக்கியிருக்கிறார்கள். முதல் முயற்சியே வெற்றியில் முடிந்திருக்கிறது. இனிமே இப்படியே தொடருங்கள்!

விமர்சனம்: ஒன் இண்டியா