முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 29, 2015

துபாய் Emirates Logistics நிறுவனத்தில் HR Executive வேலை வாய்ப்பு!!

No comments :
HR Executive
Emirates Logistics LLC - Jebel Ali Freezone

Objective of the Job: 
Assist the HR Manager for smooth management of HR functions and general administration of employee affairs.
Role & Responsibilities:
1. Send out Interview call letters
2. Process Visas, correspond with prospective candidates for documents
3. Assist in the onboarding of the new employee
4. Communicate employee the company policies and procedures
5. Document & record the HR policies, procedures and KPI’s
6. Keep proper record of Employee files, perks and benefits
7. Maintain an updated HRMS software
8. Keep track renewal of visas, medicals etc.
9. Ensure all visas are renewed timely, assist the employees for the same.
10. Be a participating resource in administration of employee benefits, engagements and training
11. Assist the HR manager in achieving the HR targets and KPI’s
12. Generate periodic reports and analysis and manage any administrative functions.
Essential Expertise & Experience: 
1. Minimum 3+ years of work experience as HR Assistant
2. MBA in Human resource Management or Administration
3. Excellent in English communication in both spoken and written
4. Excellent with Microsoft office and software usage.
5. Good organizational skills & a team worker with service minded approach to work.
Salary: AED5,500.00 /month
Required experience:
  • As HR Assistant: 2 years
TO APPLY: CLICK HERE

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்!!

No comments :
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரசிங் மூலம் தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் 2009ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.14,600 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு வழித்தடம், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை ஒரு வழித்தடம் என மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில் 24 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையிலும், 21 கி.மீ. தூரம் மேம்பால பாதையிலும் அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை 10 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக கோயம்பேடு, சிஎம்பிடி, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், சிட்கோ, ஆலந்தூர் ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஒருசில காரணங்களுக்காக அரசு தொடக்க விழாவை தாமதப்படுத்தியது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானதால் எந்த நேரத்திலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இம்மாத தொடக்கத்திலேயே திறப்பு விழா நடத்தப்படும் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக இது தள்ளிபோனது. இந்நிலையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்க உள்ளார். முதல்வர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் சேவையை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார். 

பிற்பகல் 12 மணியளவில் பயணிகள் சேவையை தொடங்கி வைத்துவிட்டு, தொடர்ந்து கோயம்பேடு, சிஎம்பிடி, அருகம்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சிஎம்ஆர்எல் பணிமனை ஆகியவற்றையும் ஜெயலலிதா வீடியோ கான்பரசிங் மூலம் திறந்து வைக்கிறார். இந்த மெட்ரோ ரயிலில் தடையற்ற மின்சார வசதி, ஏசி வசதி, தானியங்கி கதவுகள், அவசரகால தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு நவீனவசதிகள் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அனைத்து நவீனவசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் நகரும் படிகட்டுகள், கேன்டீன் வசதி, ஏடிஎம் மையங்கள், சுத்தமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் ஒவ்வொன்றும் 4 பெட்டிகளை கொண்டது. ஒரு ரயிலில் 1,276 பேர் வரை பயணிக்கலாம். நாள்தோறும் காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

கட்டணம் விபரம்:

ஆலந்தூர் - கோயம்பேடு இடையே கட்டணம் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.10ம் அதிகபட்சமாக ரூ.40ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூர் முதல் ஈக்காட்டுந்தாங்கல் வரை ரூ.10 வசூலிக்கப்படுகிறது. ஆலந்தூர் முதல் அசோக் நகர் வரை ரூ.20ம் ஆலந்தூர் முதல் வடபழனி வரை ரூ.30ம் ஆலந்தூர் முதல் அரும்பாக்கம், ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலும் ரூ. 40 கட்டணம் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பு கட்டணமாக இருமடங்கு வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சாதராண மின்சார ரயில்களைப் போலவும், பறக்கும் ரயில்களைப் போலவும் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க முடியாது. ரயில் நிலையத்தில் டிக்கெட்டை காண்பித்தால் தான் கதவுகள் திறக்கும்.

டிக்கெட் ரீசார்ஜ் வசதி:


நிரந்தர டிக்கெட் வாங்கியவர்கள் அவ்வப்போது ரயில் பயணம் செய்யும்போது, மீதமுள்ள தொகை நிலவரத்தை ரயில் நிலையங்களில் உள்ள இயந்திரத்தில் தெரிந்து கொள்ளலாம். தொகை காலியானதும் அங்குள்ள ரீசார்ஜ் இயந்திரத்தில் பணம் அல்லது ஏடிஎம் கார்டு பயன்படுத்தி நமக்கு தேவையான அளவு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. குரூப் சுற்றுலா டிக்கெட்டில் 20 பேர் வரை பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.



சென்னையில் பி.இ. கலந்தாய்வு தொடங்கியது!

No comments :



அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பி.இ. மாணவர் சேர்க்கை நேற்று(ஜூன் 28) கோலாகலமாகத் தொடங்கியது. நடப்புக் கல்வியாண்டுக்கான (2015-16) பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு அணணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது.முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.




தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரி இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அரசு ஒதுக்கீட்டுக்கு உரிய இடங்கள் 1.80 லட்சத்துக்கும் மேற்பட்டு இருப்பதால் அனைவருக்கும் இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்த மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்காக சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) முன்னதாகவே வெளிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தர வரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. முதல் நாளில் விளையாட்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜூன் 29-ல் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் கவுன்சிலிங் முடிந்தவுடன் கல்லூரிகளில் உள்ள இடங்கள், பாட வாரியாகவும் கல்லூரி வாரியாகவும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும். பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 28-ஆம் தேதி நிறைவு செய்யப்படும்.