முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 1, 2015

இன்று நேற்று நாளை - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
கால இயந்திரம் வழியாக ஒரு பெண், தான் பிறந்த அந்த நாளுக்குப் போகிறாள். பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருக்கும் தன் தாயை மருத்துவமனையில் சேர்த்து, அங்கு பிறக்கும் தன்னையே செவிலியரிடம் இருந்து வாங்கி உச்சிமுகர்கிறாள். இன்று நேற்று நாளைபடத்தில் இப்படியொரு காட்சி.

இந்த வியப்பை படம் முழுவதும் தருகிறார் அறிமுக இயக்குநர் ரவிகுமார். கால இயந்திரத்தின் வழியே கடந்த காலத்திலும் எதிர்காலத் திலும் பயணம் என்னும் சிக்கலான களத்தில் சரளமாக விளையாடுகிறார்.
யாரிடமும் வேலை பார்க்காமல் சொந்தத் தொழில் செய்து முன்னுக்கு வர நினைப்பவர் விஷ்ணு விஷால். அதற்காகப் புதிய புதிய திட்டங்களுடன் கடனுக்காக வங்கிகளின் படியேறி பல்புவாங்கிக்கொண்டிருப்பவர். அவரது நண்பர் கருணா, ராசியில்லாத ஜோசியர்.

விஷ்ணுவின் பணக்காரக் காதலி மியா ஜார்ஜ். ‘‘அப்பாவிடம் காதலைச் சொல்லவேண்டும் என்றால், முதலில் ஒரு வேலையைப் பார்’’ என விஷ்ணு விடம் சொல்கிறார் மியா. அவரோ, சொந்தத் தொழிலில் பிடிவாதமாக இருக்கிறார். பொய் சொல்லி அப்பாவைச் சம்மதிக்க வைக்க மியா முயல்கிறார். மியாவின் தந்தை தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ் அந்தப் பொய்யை அம்பலப்படுத்தி இருவரையும் தலைகுனிய வைக்கிறார்.


இதற்கிடையில் குழந்தைவேலு என் னும் ரவுடியால் ஜெயப்பிரகாஷ் பெரிய ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்.

பார்த்தசாரதி என்னும் கிறுக்குவிஞ்ஞானி பலவிதமான பரிசோதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார். அவரது புதுமையான தானியங்கி காரும், விஷ்ணு-கருணாவின் காரும் இரவு நேரத்தில் மோதிக்கொள்ள, மூவரும் சாலையில் கிடக்கிறார்கள். அப்போது தான் அந்த இயந்திரம் அவர்கள் கையில் கிடைக்கிறது. அந்த இயந்திரம் பற்றிய தகவல்களை விஞ்ஞானி கண்டுபிடித்துச் சொல்ல, அவரை ஏமாற்றிவிட்டு இயந்திரத்தைக் கைப்பற்றுகிறார்கள் நண்பர்கள். அதை வைத்துக்கொண்டு சம்பாதிக்கும் வழியைக் கண்டு பிடிக்கிறார்கள்.

கால இயந்திரம் மூலம் இறந்த காலத் துக்குப் போகும்போது அங்கு எதையும் தொந்தரவு செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அது நிகழ்காலத்திலும் பாதிப்பை விளைவிக்கும். உதாரண மாக இறந்த காலத்துக்குச் சென்று ஒருவரைக் கொன்றுவிட்டால் அவர் நிகழ்காலத்திலும் இல்லாமல் போய் விடுவார்.
கால இயந்திரம் மூலம் கடந்தகால விஷயங்களைத் தெரிந்துகொண்டு பணம் சம்பாதிக்கும் விஷ்ணுவும் கருணாவும் தங்களை அறியாமல் செய்யும் ஒரு காரியத்தால் கடந்தகால நிகழ்வில் அபஸ்வரம் தட்டிவிடுகிறது. அதன் விளைவாக அவர்களது நிகழ்காலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மீண்டும் கடந்த காலத்துக்குச் சென்று அதைச் சரிசெய்ய முனையும்போது மேலும் மேலும் சிக்கல்கள், இயந்திரத் தில் கோளாறு என்று வசமாக மாட்டிக் கொள்கிறார்கள். இப்படி நிகழ்காலத் திலும் கடந்த காலத்திலும் மாறிமாறிப் பயணிக்கும் கதை சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகிறது.

கால இயந்திரப் பயணம் என்பது சிக்கலான கருத்து. அதை குழப்பமின்றி ரசிகர்களுக்குப் புரியும்படி திரையில் சொன்னதற்காக ரவிகுமாரைப் பாராட்ட வேண்டும். காலப் பயணத் தின் விளைவுகளை சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கலந்து கொடுத்ததற்காக வும் பாராட்டலாம். ஒருவர் கடந்த காலத்துக்குச் சென்று தன்னையே பார்ப்பதைத் திரையில் பார்க்கும்போது ரசிகர்கள் கொள்ளும் ஆவலும் வியப்பும் திரைக்கதையின் வெற்றி. கடந்தகால நிகழ்வுகளைக் குழப்பிவிட்ட பிறகு அதைச் சரிசெய்வதற்காக நண்பர்கள் படும் பாடு விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. முதல் பாதி கலகலப்பு என்றால் அடுத்த பாதியில் காலப் பயணத்தின் குழப்பங்களால் ஏற்படும் விறுவிறுப்பு.


விஷ்ணு யதார்த்தமாக நடிக்கிறார். கருணா உதிர்க்கும் வசனங்களில் திரை யரங்கில் சிரிப்பலை எழுகிறது. காமெடி யன் என்பதைத் தாண்டி நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை அவர் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். மியா ஜார்ஜுக்குத் தமிழில் இது 2-வது படம். ஆனால் இந்தப் படமே அவருக்கு நல்ல அறிமுகமாக இருக்கும். வெகுளிப் பெண்ணாக, அழகான காதலியாக வந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கிறார். ரவுடியாக வரும் சாய் ரவி, பார்த்த சாரதியாக வரும் டி.எம்.கார்த்திக்கின் நடிப்பு கச்சிதம்.

கால இயந்திர வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. ஃபேன்டசி படம் என்றாலும் கிராபிக்ஸ் காட்சிகளை அதிகம் காட்டி மிரட்டவில்லை. ஒளிப்பதிவாளர் ஏ.வசந் தின் கேமரா உறுத்தலே இல்லாமல் கதையுடன் பயணிக்கிறது. காலப் பயணங்களுக்கு வித்தியாசமான வண் ணம் தந்து வேறுபடுத்திக் காட்டுகிறார். ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை நன்று.

இரண்டாவது பாதியில் பல காட்சி களுக்கு லாஜிக் இல்லை. கால இயந் திரத்தை மையமிட்ட காமெடி காட்சிகள் ஒரு கட்டத்தில் அலுப்பு ஏற்படுத்துகின் றன. ஒருவர் தன் பெண்ணுடைய காதலனை ஏற்காமல் போனாலும் இருவரையும் சேர்த்துப் பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்துவாரா?

சுறுசுறுப்பாக நகரும் திரைக்கதை இதுபோன்ற குறைகளை மறக்கடித்து நல்ல பொழுதுபோக்குப் படம் பார்த்த திருப்தியை அளிக்கிறது.


விமர்சனம்: தி ஹிந்து

துபாய் Al Bustan Centre ஹோட்டலில் Asst. Store Keeper வேலை வாய்ப்பு!!

No comments :
Asst. Store Keeper
Al Bustan Centre & Residence - Dubai

Al Bustan Centre & Residence, Dubai, UAE is inviting applications for the position of Asst. Store Keeper from suitably qualified & experienced candidates. The candidates must have experience in handling the tasks of General Stores / Food & Beverage Stores with ability to communicate in English well. Must be computer literate & experience in hospitality trade would be an advantage Attractive basic salary, accommodation, medical, meals, uniforms, 30 days paid annual leave, transportation, return ticket to home country every 24 months are available for selected candidates
Other Information
  • Contract Type : Permanent Staff
  • Last Application Date : Thursday, July 30, 2015

TO APPLY: CLICK HERE

பரமக்குடி மாணவி ஆசியஅளவில் சாதனை!!

No comments :
பரமக்குடி மாணவி ஆசியஅளவில் சாதனை படைத்துள்ளார். அவர் குண்டு எறிதலில் முந்திய சாதனையை முறியடித்தார்.

ஆசிய போட்டி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி குத்துக்கல் தெருவை சேர்ந்த குருமூர்த்தி மகள் கவுரிசங்கரி. இவர் பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவருகிறார். இவர் குண்டு எறிதல் போட்டியில் பல வெற்றிகளை பெற்று பதக்கங்களை குவித்துள்ளார். 





இந்தநிலையில் சீனாவில் நடந்துவரும் ஆசிய தடகள போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் குண்டு எறிதலில் கவுரிசங்கரி கலந்து கொண்டார். இந்த போட்டியில் இவர் 13.82 மீட்டர் தூரம் குண்டு எறிந்து ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் குண்டு எறிதலில் ஏற்கனவே மும்பையை சேர்ந்த மேகனா என்பவரது 12.91 மீட்டர் தூர சாதனையை முறியடித்து ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளார். சாதனை மாணவி கவுரிசங்கரிக்கு வருகிற 2-ந்தேதி தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. 

வாழ்த்து:

இந்த சாதனை குறித்து மாணவி கவுரிசங்கரி சீனாவில் இருந்து செல்போன் மூலம் பரமக்குடியில் உள்ள அவருடைய பெற்றோர் குருமூர்த்தி- தனலெட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். இதை யடுத்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாதனை மாணவி கவுரி சங்கரிக்கும், அவருக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் பரமக்குடி அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சரவண சுதர்ச னுக்கும் முக்கிய பிரமுகர்கள், விளையாட்டுத் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். 


செய்தி: தினத்தந்தி

இடைத்​தேர்த​லில் ஜெயல​லிதா வெற்றி, இராமநாதபுர மாவட்டத்தில் கொண்டாட்டம்!!

No comments :
சென்னை ஆர்.கே.​ நகர் இடைத்​தேர்த​லில் ஜெயல​லிதா வெற்றி பெற்​றதை அடுத்து,​​ சிவ​கங்கை,​​ ராம​நா​த​பு​ரம் மாவட்​டங்​க​ளில் பல்​வேறு இடங்​க​ளில் செவ்​வாய்க்​கி​ழமை அதி​மு​க​வி​னர் பொது​மக்​க​ளுக்கு இனிப்பு வழங்​கிக் கொண்​டா​டி​னர்.​

சிவ​கங்கை மாவட்​டச் செய​ல​ரும்,​​ மக்​க​ளவை உறுப்​பி​ன​ரு​மான பி.ஆர்.​ செந்​தில்​நா​தன் தலை​மை​யில்,​​ அக்​கட்​சி​யி​னர் எம்.ஜி.ஆர்.​ சிலைக்கு மாலை அணி​வித்​த​னர்.​ பின்​னர்,​​ ​ அவ்​வ​ழியே பேருந்​தில் பய​ணம் செய்த பய​ணி​கள் மற்​றும் பொது​மக்​க​ளுக்கு இனிப்​பு​கள் வழங்​கி​னர்.​ இந் நிகழ்ச்​சி​யில்,​​ சிவ​கங்கை நக​ரச் செய​லர் ஆனந்​தன்,​​ மாண​வ​ரணி ராஜா ஜாக்கு​லின் அலெக்ஸ்,​​ சிவாஜி,​​ வழக்​கு​ரை​ஞர் பிரிவு சுந்​த​ர​பாண்​டி​யன்,​​ தொகு​திச் செய​லர் சொர்ண​லிங்​கம்,​​ நகர்​மன்ற துணைத் தலை​வர் சுந்​தர​லிங்​கம் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.​



ராம​நா​த​பு​ரத்​தில் கொண்​டாட்​டம்:​ ​ 

ராம​நா​த​பு​ரம் அரண்​மனை முன்​பாக,​​ அதி​முக மாவட்​டச் செய​லர் ஆர்.​ தர்​மர் தலை​மை​யில் அக்​கட்​சி​யி​னர் பொது​மக்​க​ளுக்கு இனிப்பு வழங்​கி​யும்,​​ பட்​டாசு வெடித்​தும் கொண்​டா​டி​னர்.​ இந்​நி​கழ்ச்​சி​யில்,​​ கட்​சி​யின் அவைத்​த​லை​வர் செ.​ முரு​கே​சன்,​​ நகர் செய​லர் அங்​குச்​சாமி,​​ மாவட்ட மாண​வ​ர​ணிச் செய​லர் செந்​தில்​கு​மார்,​​ மாவட்ட மாண​வ​ரணி ஒன்​றிய இணைச் செய​லர் சபரி.​ தயா​மதி,​​ மாவட்ட திட்​டக் குழு உறுப்​பி​னர் கே.சி.​ வர​தன்,​​ நகர்​மன்ற உறுப்​பி​னர்​கள் வீர​பாண்டி,​​ தன​சே​க​ரன்,​​ குமார் உள்​ளிட்ட பல​ரும் கலந்​து​கொண்​ட​னர்.​

முது​கு​ளத்​தூர்,​​ கட​லா​டி​யில் அதி​மு​க​வி​னர் கொண்​டாட்​டம்:​​ ​ ​ முது​கு​ளத்​தூர்,​கட​லாடி,​​ சாயல்​குடி பகு​தி​க​ளில் அதி​மு​க​வி​னர் பட்​டாசு வெடித்​தும்,​​ இனிப்பு வழங்​கி​யும் கொண்​டா​டி​னர்.​ ​

முது​கு​ளத்​தூ​ரில்,​​ கவுன்​சி​லர் உடை.​ எம்.​ சிவக்​கு​மார் தலை​மை​யி​லும்,​​ ஒன்​றிய இளை​ஞ​ர​ணிச் செய​லர் தூரி மாட​சாமி,​​ நகர் பேரவை இணைச் செய​லர் அர்ச்​சு​னன்,​விவ​சாய அணி இணைச் செய​லர் வி.​ கருப்​பு​சாமி ஆகி​யோர் முன்​னி​லை​யி​லும்,​​ அதி​மு​க​வி​னர் பட்​டாசு வெடித்​தும்,​​ பொது​மக்​க​ளுக்கு இனிப்பு வழங்​கி​யும் கொண்​டா​டி​னர்.​

இதில்,​​ கவுன்​சி​லர்​கள் சீனி,​​ சர​வ​ணன்,​​ முரு​கன்,​​ அண்ணா தொழிற்​சங்க நிர்​வா​கி​கள்,​​ மாண​வ​ர​ணிச் செய​லர் சி.​ தமிழ்,​​ வழக்​கு​ரை​ஞர் பிரிவு செய​லர் அழ​கு​முத்து,​​ நகர் மக​ளிர் அணி செய​லர் மணி​மே​கலை,​​ ஊராட்​சித் தலை​வர்​கள் மாயக்​கண்​ணன்,​​ ராமர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

கட​லா​டி​யில்,​​ ஒன்​றி​யக் கழ​கச் செய​லர் கே.​ முனி​ய​சாமி பாண்​டி​யன் தலை​மை​யில் பட்​டாசு வெடித்து,​​ இனிப்பு வழங்கி கொண்​டா​டப்​பட்​டது.​ இதில்,​​ ஒன்​றி​யக் குழு துணைத் தலை​வர் பத்​ம​நா​தன்,​​ ஒன்​றிய அவைத் தலை​வர் வேலுச்​சாமி,​​ நக​ரச் செய​லர் முரு​கன்,​​ கவுன்​சி​லர்​கள்,​​ ஊராட்​சித் தலை​வர்​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

சாயல்​கு​டி​யில்,​​ ஒன்​றி​யக் குழுத் தலை​வர் வீ.​ மூக்​கையா தலை​மை​யில்,​​ அக்​கட்​சி​யி​னர் பொது​மக்​க​ளுக்கு ​ இனிப்பு வழங்​கி​யும்,​​ பட்​டாசு வெடித்​தும் கொண்​டா​டி​னர்.​ இதில்,​​ ஒன்​றி​யச் செய​லர் அந்​தோ​ணி​ராஜ்,​​ மாவட்ட எம்.ஜி.ஆர்.​ மன்​றச் செய​லர் எம்.​ செய்​யது காதர்,​​ நக​ரச் செய​லர் சுப்​பி​ர​ம​ணி​யம் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.​


செய்தி: தினமணி