முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 18, 2015

பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு!!

No comments :


பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் துணை என்ஜினீயர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக் காத்திருக்கிறது.


மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இன்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 22 ஆகும். தேர்வு செய்யப்படுபவர்கள் பெங்களூரிலுள்ள பெல் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய முடியும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எம்இ, எம்.டெக், பி.இ., பி.டெக் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றி தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவமும் இருத்தல் நலம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்த்தப்படும்.

ஊதியம் ரூ.16,400-ரூ.40,500 என்ற அடிப்படையில் இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bel-india.com/-ல் தொடர்புகொள்ளலாம்.

அமீரக Ghantoot Landcaping நிறுவனத்தில் Document Controller வேலை வாய்ப்பு!!

No comments :
Document Controller
Ghantoot Landcaping LLC - Dubai


Document Controller- RUWAIS ADNOC PROJECT
Gathering information for implementing the new project. Collecting inputs from clients. Listing out the Documents and documenting the project details. Submission of documents and creating Transmittal. Tracking the pending documents through weekly progress reports. Notifying the involved party for tacking appropriate action on the pending documents. Manual follow up with the client’s internal team to get an expected schedule for all pending documents
Required experience:
  • Document Controller: 2 years
TO APPLY: CLICK HERE

இந்தியா - அமீரக நாடுகள் மத்தியில் புதிய ஒப்பந்தங்கள், இந்தியாவில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு!!

No comments :
இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு நாடுகளுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான தாக்குதலை தீவிரபடுத்த இந்தியா-ஐக்கிய அமீரக நாடுகள் முடிவு செய்துள்ளன. இதுதவிர, ராணுவ ஆயுத தயாரிப்பில் ஒத்துழைப்பு வழங்கவும், இருநாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி மூலம் பாதுகாப்பை அதிகரிக்கவும், இருநாடுகளுக்கு இடையே உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் 6 மாதத்திற்கு ஒருமுறை கூடி ஆலோசனை நடத்துவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 சதவீதம் வரை முதலீடுகளை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது அமீரகம். அதாவது, அடிப்படை கட்டமைப்பு துறையில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 

கடந்த 1970-களில் இந்தியா-ஐக்கிய அமீரகம் இடையே 180 மில்லியன் டாலர்கள் அளவிற்கு வர்த்தம் நடந்து வந்தது. ஆனால், இன்று 60 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. 2014-2015 நிதியாண்டில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 3-வது மிகப்பெரிய டிரேடிங் பார்ட்னராக ஐக்கிய அமீரகம் தற்போது உருவாகியுள்ளது. 

இது இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தொழிற்சாலை கட்டடங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், சாலைகள், துறைமுகங்கள், ரெயில்வே கட்டமைப்புகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் வேகமான முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தகவல் இருநாடுகளின் தலைவர்களும் சந்தித்து கொண்டபிறகு நேற்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.