முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 7, 2015

ராமநாதபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா!!

No comments :
ராமநாதபுரத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்மிகு கண்ணன் கோயில்களிலும், ஹரே கிருஷ்ண சத்சங்க மையத்தின் சார்பிலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் ஹரே கிருஷ்ண சத்சங்க மையத்தின் சார்பில் ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு ஸ்ரீமத் பாகவதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து ஸ்ரீகிருஷ்ணரும், ராதையும் ஊஞ்சல் ஆடும் உற்சவம் நடைபெற்றது. பின்னர் பகவத்கீதையின் சுலோகங்களை சொன்ன பள்ளி மாணவ,மாணவியர்க்கும், கிருஷ்ணர்,ராதை வேடம் அணிந்து வந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலபிரபுபாதா அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.

ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தானில் கிருஷ்ண ஜயந்தி விழா திருவிளக்கு பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை பால்குடம் எடுத்து வரப்பட்டு அருள்மிகு கண்ணபிரானுக்கு பாலாபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. பெண்களுக்கென பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.



விழாவுக்கு மதுரை பாண்டியன் சரசுவதி யாதவ் பொறியியல் கல்லூரி நிறுவனர் மலேசியா.எஸ். பாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சி முன்னாள் தலைவர் கே.கவிதா கதிரேசன் வரவேற்று பேசினார்.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட யாதவர் சங்கத் தலைவர் வி.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைபவமும், வழுக்கு மரம் ஏறுதல், கண்ணபிரான் அழைப்பு மற்றும் உறியடி உற்சவம் ஆகியனவும் நடந்தன. பின்னர் அருள்மிகு கண்ணபிரான் தேரில் பவனி வந்தார்.

ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் கே.பாண்டி, செயலர் ஏ.எஸ்.சந்திரன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
ராமநாதபுரம் வடக்குரத வீதி அருள்மிகு ஸ்ரீருக்மணி சமேத பாண்டுரெங்க கிருஷ்ண சுவாமி சன்னதியில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை 108 சங்காபிஷேகத்துடன் தொடங்கியது.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. மதியம் அன்னதானமும்,மாலையில் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. குளத்தூர் கோ.ஸ்ரீனிவாசராகவன் ஸ்ரீஜெயந்தி விழா நிகழ்ச்சிகளை நடத்தினார்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் ஆடிட்டர்.எம்.ஏ.சுந்தர்ராஜன், எஸ்.முத்து சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்ட மீனவ பெண்மணி லெட்சுமி சர்வதேச விருதுக்கு தேர்வு ! அக் 8ம்தேதி கலிபோர்னியாவில் விருது வழங்கப்படுகிறது!!

No comments :


ராமேசுவரம் அருகே சின்னப் பாலம் மீனவப் பெண் லெட்சுமி அமெரிக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடல்சார் ஆய்வு மையம் (சீகாலஜி) செயல்படுகிறது. இது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தீவுகளில் வசிக்கும் அரிய வகை தாவர இனங்கள், கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்காக இ யங்கி வருகிறது. மேலும் இந்த மையம் ஆண்டுதோறும் கடல் வாழ் உயரினங்களை பாதுகாப்பவர்களுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறது.


இந் நிலையில் கடந்த ஆண்டுக்கான விருதுக்காக ராமேசுவரம் அருகே உள்ள சின்ன ப்பாலத்தைச் சேர்ந்த மீனவப் பெண் லெட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சீகாலஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

லெட்சுமி தனது குழந்தை பருவத்தில் இருந்தே மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளில் கடற்பாசிகளை சேகரிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார். மேலும் அவரது சமூகத்தைச் சேர்ந்த பல பெண்களுக்கு பாசி சேகரிப்பதே வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் பாசி சேகரிக்க தடை விதித்தும், பாசி சேகரிக்கும் பெண் களுக்கு அபராதம் விதித்தும், மீனவப் பெண்களின் படகுகளை கைப்பற்றியும் அவர்களது வாழ் வாதாரத்தை சுரண்டி வந்தனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், கடல்சார் விஞ்ஞானிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாரம்பரிய முறையில் பாசி சேகரிப்பதால் கடலில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதை லெட்சுமி எடுத்துரைத்தார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 25 மீனவ கிராமங்களில் 2000-க்கும் மேற் பட்ட பாசி சேகரிக்கும் மீனவப் பெண்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்பு ஏற்படுத்தி அவர்களுக்கு பயோ மெட்ரிக் கார்டுகள் வழங்கி வாழ்வாதாரத்தை தொடர வைத்துள்ளார். இதற்காக லெட்சுமிக்கு கடல்சார் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லெட்சுமி கூறியதாவது:

சின்னப்பாலம் பகுதி மீனவப் பெண்கள் மரிக்கொழுந்து பாசி களை எடுப்பதற்கு, வனத் துறையினர் தடை விதித்ததோடு மட்டுமின்றி அபராதமும் விதிப்பார்கள். சில நேரங்களில் தகாத வார்த்தைகளில் திட்டுவார்கள். ஒருமுறை கடலுக்குள் நாங்கள் பாசி சேகரித்தபோது கரையில் வைத்திருந்த ஆடைகளை வனத் துறையினர் எடுத்துச் சென்றனர். சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தோம். இப்போது எங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது கிடைத்துள்ளது. இந்த விருது அக்டோபர் 10-ம் தேதி வழங்கப்பட உள்ளது என்றார்.

செய்தி: தி ஹிந்து



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)