முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 28, 2015

புதன்கிழமை (செப்.30) ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலின்!!

No comments :
ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலின் வரும் புதன்கிழமை (செப்.30) பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் புதன்கிழமை காலை 8 மணிக்கு பரமக்குடி நகர் எமனேசுவரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் சன்னதி வாசலில் நெசவாளர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் பரமக்குடியில் முக்கிய கடை வீதிகளில் மக்களிடம் குறைகளை கேட்கிறார்.


இதனையடுத்து மிளகாய் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பாக வாகனத்தில் இருந்தபடியே பேசுகிறார். பின்னர் அங்கிருந்து ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் கலாம் வீட்டில் அவரது உறவினர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் ராமேசுவரம் ஸ்ரீராமநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர்களை சந்தித்து பேசுகிறார்.


பகலில் ராமேசுவரம் தீவு பாம்பன் தெற்குவாடி பகுதியில் மீனவர்களை சந்தித்து பேசுகிறார். இதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பரக்கத் மகாலில் மாணவர்களோடும் அதன் பின்னர் முக்கியப் பிரமுகர்களோடும் கலந்துரையாடுகிறார்.

மாலையில் அரண்மனை கடை வீதியில் பொதுமக்களயும், வியாபாரிகளையும் சந்திக்கிறார். மாலை 6 மணியளவில் திருவாடானையில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இரவு 8 மணிக்கு தொண்டியில் கடைத்தெருவில் மக்களை சந்தித்து பேசிவிட்டு புதுக்கோட்டை மாவட்டத்துக் செல்வதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி: தினமணி


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பாம்பன் ரெயில்பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது!!

No comments :

பாம்பன் ரெயில்பால தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை மணிக்கு ராமேசுவரம்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு 8.30 மணிக்கு பாம்பன் ரெயில் பாலத்தை அடைந்தது. 




ரெயில் தூக்குபாலத்தில் சென்றபோது தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், அரவிந்தன், மாவட்ட இளைஞர்பாசறை செயலாளர் கதிரவன், சிவங்கையை சேர்ந்த காளிஸ்வரன், சரவணன் ஆகிய 5 பேர் கட்சிகொடியுடன் ரெயில்பால பக்கவாட்டு நடைபாதை பகுதியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரெயில் கடந்து சென்றதும் தண்டவாளத்தில் படுத்து கட்சி கொடியுடன் இலங்கை போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி உள்நாட்டிலேயே விசாரணைக்கு இலங்கைக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டுனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த பாம்பன் போலீஸ் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்டின், ஏட்டு சூசைமாணிக்கம் ஆகியோர் விரைந்து சென்று 5 பேரையும் பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)