முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 31, 2015

இன்று (31-10-2015) கீழக்கரை கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து!! (UPDATED)

No comments :
கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானது.

இன்று (31-10-2015) காலை 8.30 மணி அளவில் காஞ்சிரங்குடி அருகே கனமழையின் காரணமாக முகம்மது சதக் பொறியியல் கல்லூரி பேருந்து கவிழ்ந்து  விபத்துள்ளானது.

அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அதிகாரிகள் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.












பெரும் சேதத்திலிருந்து இறைவன் காப்பாற்றினான், சிறு காயங்களுடன் மாணவர்கள், ஒட்டுநர் மற்றும் நடத்துனர் உயிர் தப்பினர்.

காயமடைந்தவர்கள் இராமநாதபுர அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


செய்தி மற்றும் படங்கள்: திரு சுஐபு, கீழக்கரை.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் எலக்ட்ரானிக் கடையில் ரூ.16.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!!

No comments :

ராமநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான எலக்ட்ரானிக் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு அதிலிருந்த ரூ.16.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.


ராமநாதபுரம் சாலைத் தெருவில் தனியார் நிறுவனத்தின் சார்பில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடை உள்ளது. இக்கடையின் பின்பக்க கதவில் துளையிட்டு அதிலிருந்த 141 செல்போன்கள், 8 மடிக்கணினிகள், 21 காமிராக்கள், 14 சார்ஜர்கள் உட்பட மொத்தம் ரூ.16.75 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

வழக்கம் போல வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறக்க வந்த போது பொருட்கள் திருடு போயிருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக கடையின் மேலாளர் சரவணக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை அருகே வேன் கவிழ்ந்து விபத்து, ஒரு சிறுமி இறப்பு!!

No comments :
கீழக்கரை அருகே புதன்கிழமை சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் ஒரு சிறுமி உயிரிழந்தார். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

மைசூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த 35 பேர் தமிழ்நாட்டில்  கன்னியாகுமரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களை தரிசிப்பதற்கு சுற்றுலா வேன் ஒன்றில் சில தினங்களுக்கு முன் புறப்பட்டனர். 

சுற்றுலா வேனை ஜாபர்கான்(54) என்பவர் ஓட்டிவந்தார். புதன்கிழமை நள்ளிரவு திருச்செந்தூரிலிருந்து ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் சிக்கல் அரசு மருத்துவமனை அருகே வந்த போது நிலை தடுமாறிய வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த மைசூர் விஜயநகர் சீனிவாசமூர்த்தி மகள் பூமிகா(9)  படுகாயமடைந்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இவ்விபத்தில் காயமடைந்த 14 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)