முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 4, 2015

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!!

No comments :
ரயிலில் பட்டாசு, எளிதில் எரியும் பொருள்களை எடுத்து செல்லும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் எச்சரித்தனர். 

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு, புத்தாடை, இனிப்புகளை வாங்கி பயணிகள் ரயிலில் பயணிப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் பட்டாசுகள் மற்றும் எளிதில் எரியும் பொருள்களை ரயிலில் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் எஸ்.ஐ. சிவகாமி தலைமையில் போலீசார், சென்னை, மதுரை செல்லும் ரயில் பயணிகளுக்கு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

தடையை மீறி பட்டாசு, எளிதில் வெடிக்கும் பொருள்களை பயணிகள் எடுத்து சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். நேற்று, ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே ரயிலில் செல்ல அனுமதித்தனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

முதுகுளத்தூர் அருகே புதிய வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி!!

No comments :
முதுகுளத்தூர் அருகே பேரையூரில் நம்மாழ்வார் தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை செவ்வாய்க்கிழமை பாடலாசிரியர் ஸ்நேகன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பேரையூரில் அன்னை குழுமத்தின் சார்பில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி நிறுவப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில்,திரைப்படப் பாடலாசிரியர் ஸ்நேகன் குத்துவிளக்கேற்றி கல்லூரியை தொடங்கி வைத்தார். அன்னை குழுமத்தின் தாளாளர் அப்துல் கபூர், செயலாளர் உமாயூன் கபீர், நிறுவனர் அன்வர் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நம்மாழ்வார் கல்லூரியின் நிறுவுனர் எம்.ஐ.அகமது யாசின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


கல்லூரியின் தொடக்க விழாவில், சிட்டி யூனியன் வங்கி அதிகாரி பாலசுப்பிரமணியன், இயக்குநர் அமீர், கவிஞர்கள் அறிவுமதி, ஈசாக், இசையமைப்பாளர் தாஜ்நூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத் துணை வேந்தர் கே.ராமசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். முடிவில் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் சி.சேகர் நன்றி தெரிவித்தார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)