முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 11, 2015

வேதாளம் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
அஜீத்தைஅவரது ரசிகர் பலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட பக்கா கமர்ஷியல் படைப்பு வேதாளம்.

சென்னையிலிருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜீத். கால் டாக்சியில் பயணிக்கும்போது டிரைவர் மயில்சாமியின் நட்பு கிடைக்கஅவர் உதவியுடன் கொல்கத்தாவில் தங்குகிறார்கள். கூடவே அஜீத்துக்கு கால் டாக்சி ட்ரைவர் வேலையும் கிடைக்கிறது.

அஜீத் ஒரு முறை சவாரி போகும்போது வக்கீல் ஸ்ருதி ஹாஸன் பயணிக்கிறார். அஜீத்தின் வெகுளித்தனத்தைப் பார்த்த அவர்ஒரு வழக்கில் பொய் சாட்சியாக கூட்டிப் போகிறார். ஆனால் இவர் பொய் சாட்சி என்பது அம்பலமாகிவிடஸ்ருதி வக்கீல் தொழிலைப் பார்க்க முடியாத நிலை. இந்த நிலையில் லட்சுமி மேனனை லவ்வுகிறார் அஸ்வின். அஜீத் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ஒரு நாள் இரு கடத்தல்காரர்களை போட்டுத் தள்ளுகிறார் அஜீத். அதை ஸ்ருதி ஹாஸன் பார்த்துவிடஅந்த கட்டத்தில் அஜீத் தன்னைப் பற்றிச் சொல்கிறார். அப்போதுதான் லட்சுமி அவர் தங்கையே இல்லை எனத் தெரிகிறது. அஜீத் யார்அவர் ஏன் கொலை செய்கிறார்லட்சுமி மேனனுக்கும் அவருக்கும் உள்ள உறவு என்னஎன்பதை மசாலா மணத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா.




பரம சாது.. பயங்கர சண்டை பார்ட்டி என இரு வேறுபட்ட சுபாவங்களைக் காட்டும் பாட்ஷா டைப் படம் இது. அஜீத் எந்தக் குறையும் வைக்கவில்லை. சொல்லப் போனால் அவ்வப்போது தேங்கி நிற்கும் திரைக்கதைக்கு தோள் கொடுத்திருக்கிறது அவரது மாஸ் இமேஜ்.

நீ கெட்டவன்னா, நான் கேடு கெட்டவன்... போன்ற வசனங்களை அஜீத் பேசும் போதெல்லாம் காது கிழிகிறது அவரது ரசிகர்களின் கைத் தட்டல்களில்.

இந்த மாதிரி ஆக்ஷன் படங்களில் ஒரு கதாநாயகிக்கு என்ன வேடமோ அதுதான் ஸ்ருதி ஹாஸனுக்கு. அதை செவ்வனே செய்திருக்கிறார். ஆனால் தங்கையாக வரும் லட்சுமி மேனனுக்கு நல்ல வாய்ப்பு. இது போன்ற வேடங்களை ஊதித் தள்ளுபவர் லட்சுமி. அதுவும் அஜீத்துடன் வாய்ப்பு என்பதால் அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பயணிகளின் வசதிக்காக சென்னை– ராமேசுவரம் ரெயில்களின் வழித்தடத்தை மாற்ற வேண்டும் - அன்வர்ராஜா எம்.பி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட பயணிகளின் வசதிக்காக சென்னைராமேசுவரம் ரெயில்களின் வழித்தடத்தை மாற்ற வேண்டும் என்று அன்வர்ராஜா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் ரெயில் தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ராமநாதபுரத்தில் அன்வர்ராஜா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:– 
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் வந்து செல்ல வசதியாக தங்கச்சிமடம் பகுதியில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும். தற்போது நேர மாறுபாடு காரணமாக 2 சென்னை ரெயில்களிலும் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதனை போக்கும் வகையில் சென்னைராமேசுவரம் ரெயில்களின் வழித்தடத்தை மாற்றவேண்டும்.சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலை அரியலூர், விருத்தாச்சலம் வழியாக இயக்குவதற்கு பதிலாக மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக இயக்க வேண்டும். இதனால் காலை 5 மணிக்கு ராமநாதபுரம் வந்தடையும். இதேபோல சென்னையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் ரெயிலை மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக இயக்குவதற்கு பதிலாக விருத்தாச்சலம், அரியலூர் வழியாக இயக்கினால் காலை 8 மணிக்கு முன்னதாக ராமநாதபுரம் வந்துவிடும். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகஅளவில் ரெயில் வந்து செல்வதால் ராமேசுவரத்தில் இருந்து தாம்பரத்திற்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் விட வேண்டும்.

ராமேசுவரத்தில் இருந்து மங்களூருக்கு மதுரை, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக பகல்நேர எக்ஸ்பிரஸ் ரெயில் விட வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும். ஓகா எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரம் 3 முறை இயக்க வேண்டும். மானாமதுரையில் இருந்து புறப்படும் மன்னார்குடி ரெயிலை இணைக்கும் வகையில் ராமேசுவரத்தில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் மதுரை பயணிகள் ரெயிலின் நேரத்தினை காலை 11.15 மணியாக மாற்ற வேண்டும்.
மண்டபம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தனியார் முகவர் மூலம் டிக்கெட் வழங்கும் முன்பதிவு வசதி ஏற்படுத்தவேண்டும். உச்சிப்புளி ரெயில் நிலையத்தில் சென்னை ரெயில்கள் நின்று செல்ல முதல்கட்டமாக தனியார் டிக்கெட் முகவர் மூலம் அனைத்து டிக்கெட்டுகளும் வழங்கும் வசதி ஏற்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கணக்கிட்டு விரைவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் காத்திருக்கும் வெளிமாநில ரெயில்களை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும்.


குறிப்பாக மண்டபம் ரெயில் நிலையத்தில் முன்பதிவு வசதி, உச்சிப்புளியில் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தனியார் முகவர் முன்பதிவு வசதி, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வழித்தட மாற்றம், தங்கச்சிமடத்தில் ரெயில் நிலையம், தாம்பரத்தில் இருந்து பகல்நேர எக்ஸ்பிரஸ் ரெயில், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களை ராமேசுவரம் வரை நீட்டித்தல் போன்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதால் உடனடியாக நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தேவைக்கான இதுபோன்ற திட்டங்களை ரெயில்வே அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: தினசரிகள்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)