(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, January 19, 2016

துபாயில், இந்தியாவின் 67-வது குடியரசு தின விழாவையொட்டி சிறப்ப்பாக நடத்தப்பட்ட ரத்ததான முகாம்!!

No comments :
துபாய் ஈமான் கல்சுரல் செண்டர் இந்தியாவின் 67-வது குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு ரத்ததான முகாமை 15.01.2016 வெள்ளிக்கிழமை காலை மணிக்கு சோனாப்பூர் அல் நஜ்மா அல் பரிதா தொழிலாளர் முகாமில் நடத்தியது.


இந்த ரத்ததான முகாமுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அல் நஜ்மா அல் பரிதா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜமால் முகம்மது அப்துல் கலாம் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ரத்ததான முகாமில் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். ரத்ததான முகாமிற்கான வசதிகளை சிறப்புடன் செய்து கொடுத்த அல் நஜ்மா அல் பரிதா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜமால் முகம்மது அப்துல் கலாமுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா நினைவுப் பரிசை வழங்கி கௌரவித்தார். மேலாளர் ஜமால் ஹாஜாவுக்கு ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் பூங்கொத்து கொடுத்து கௌரவித்தார்.




ரத்ததான முகாமுக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தலைமையில் முதுவை ஹிதாயத்ஹமீது யாசின்பைசுர் ரஹ்மான்கூத்தாநல்லூர் ஹிதாயத்துல்லாஅபுதாகிர்அஞ்சுகோட்டை அப்துல் ரசாக்காதர் மொகிதீன்யாக்கூப்மொகிதின்ஜாபர் சித்தீக்தமீம் அன்சாரிகாயல் வாஹித்படேஷா பஷீர்காயல் ஈசா உள்ளிட்டோர் சிறப்புடன் செய்திருந்தனர்.

தமிழ் ஆர்வலர் விஜயராகவனின் புதல்விகள் ரத்ததானம் செய்தவர்களுக்கான சான்றிதழ்களை அழகிய கையெழுத்தில் எழுதி கொடுக்கும் பணியினை மேற்கொண்டனர்.






அல் நஜ்மா அல் பரிதா நிறுவனத்தின் சார்பில் ரத்ததானம் செயதவர்களுக்கு வேண்டிய பழங்கள் மற்றும் ஜூஸ்களை மேலாளர் அபுதாகிர், சதாம், ராஜவேல் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற அல் ரவாபி நிறுவனம், பிளாக் துலிப் பிளவர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அணுசரனை வழங்கியிருந்தன.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment