(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 24, 2016

அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் ரத்த தான முகாம்!!

No comments :
ராமநாதபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் தன்னார்வ ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட மாணவரணியின் செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அதிமுக மாவட்டச் செயலர் ஆர்.தர்மர்,மகளிர் அணியின் மாவட்டச் செயலர் கவிதா சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவரணி மாவட்ட துணைச் செயலர் சுரேஷ் வரவேற்றார்.
இதில், மாணவரணியைச் சேர்ந்த தொண்டர்கள் 68 பேர் ரத்த தானம் செய்தனர்.



அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் ஆய்வக நுட்பநர் சபீஅகமது உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக இம்முகாமை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் தொடங்கிவைத்தார்.

அண்ணா தொழிற்சங்க இணைச்செயலர் ஏ.பி.சந்திரன், மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் ரவீந்திரன்,தமிழ்வாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment