(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 12, 2016

7 நாள்களுக்கும் மேலாக நகைக் கடைகள் ஸ்ட்ரைக்!!

No comments :
நகைக் கடைகள் 7 நாள்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருப்பதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில்  நகை வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலர் பி.பார்த்தீபன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: மத்திய அரசு பட்ஜெட்டில் தங்க நகை உற்பத்தி மீது கலால் வரி ஒரு சதவிகிதம் விதித்ததை வாபஸ் பெற வலியுறுத்தி கடைகளை அடைத்து வேலை நிறுத்தத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வர்த்தகம் முடங்கியுள்ளது. திருமணம் மற்றும் கோயில் திருவிழா நேரமாக இருப்பதால் பொதுமக்கள் நகை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். நகைக்கடைகளை சார்ந்து வாழும் எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.



இதனை உணர்ந்து மத்திய அரசு நகை வியாபாரிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் என்று நம்புகிறோம். அரசுக்கும், வணிகர்களுக்கும் எந்த வித பயனும் இல்லாத தங்கக் கட்டுப்பாட்டு சட்டத்தை வி.பி.சிங் அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. அதற்குப் பின் நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியும் இதே திட்டத்தை அறிவித்து பின்னர் அதை திரும்ப பெற்றுக் கொண்டார். இதே போல தற்போதைய மத்திய அரசும் இதை திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம் என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment