(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 30, 2016

கீழக்கரையில் கல்லூரி மாணவரை கொல்ல முயன்றவர் கைது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கல்லூரி மாணவரை கொல்ல  முயன்றவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சேர்ந்தவர் ஹபீப் முஹம்மது மகன் முஹம்மது மகாசின்(27). இவர் கடற்கரை அருகே குடி போதையில் இருந்துள்ளார். அவரை, அந்த வழியாக வந்த கேட்டரிங் கல்லூரி மாணவர் நபில்மரைக்காயர்(17) கிண்டல் செய்துள்ளார்.  


இதன் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், முஹம்மது மகாசின்  அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து நபில் மரைக்காயரை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து புகாரின் பேரில் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து முஹம்மது மகாசினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment