(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 10, 2016

திமுக ஆட்சி வந்தவுடன் கீழக்கரை நகராட்சியில் கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு செல்வார்கள்! ஜவாஹிருல்லா பேச்ச!!

No comments :
திமுக ஆட்சி வந்தவுடன் கீழக்கரை நகராட்சியில் கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு செல்வார்கள்! ஜவாஹிருல்லா பேச்ச!!

கீழக்கரையில் மமக வேட்பாளர் ஜவாஹிருல்லா தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெற உள்ள நிலை யில், கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா கீழக்கரையில் 500 பிளாட், 200பிளாட், மேலத் தெரு, தெற்குத்தெரு, சின்னகடைத்தெரு, கிழக்குத்தெரு, நடுத்தெரு, வடக்குத் தெரு ஆகிய பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேரித்தார்.


மேலும் அவர், வீடு வீடாகவும் மசூதி, தேவாலயம், கோயில் ஆகியவற்றில் உள்ள முக்கிய பிரமுகர்களை யும் சந்தித்து வாக்கு கேட்டார்.

கீழக்கரையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஜவாஹிருல்லா பேசியதாவது….

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தனி தாலுகா, குப்பை கிடங்கு வசதி உள்ளிட்ட கீழக்கரைக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்.
கீழக்கரையில் பள்ளிகளுக்கு நிதி உதவி, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை எம் எல் ஏ நிதியிலிருந்து செய்துள்ளேன் இதில் ஒரு நயா பைசா நான் கையூட்டு பெற்றதாக யாராவது சொல்ல முடியுமா ? சவாலாக கேட்கிறேன். ஆனால் ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் எவ்வளவு கமிசன் பெறலாம் என்ற நோக்கத்தில் செயல்படும் அதிமுக அரசின் அத்தாட்சிதான் இந்த கீழக்கரை நகராட்சி.


கீழக்கரை நகராட்சிக்கு ஆணையாளர் என்ற பொறுப்பை பெற்று தந்தவன் நான். கீழக்கரையில் இரண்டு நேர்மையான முஹம்மது முஹைதீன் மற்றும் முருகேசன் என்ற ஆணையாளர்கள் மாற்றப்பட்டார்கள். இதிலிருந்தே இந்த நகராட்சியை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் இந்த அதிமுக நகராட்சிக்கு இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கீழக்கரை நகராட்சியில் நடைபெறாத பணிகளுக்கு நகராட்சி நிர்வாகமே பொறுப்பு.திமுக ஆட்சி வந்தவுடன் தற்போதை நகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழல்கள் அம்பலப்படும் .மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு செல்வார்கள்.

இவ்வாறு பேசினார்.


இதில் கீழக்கரை திமுக நகர செயலாளர் பசீர் அகமது, நிர்வாகிகள் ஜமால் பா ரூக், கென்னடி, சாகுல் ஹமீது, நசுருல்லா, மமக எம் எல்ஏ அஸ்லம் பாஷா, நிர்வாகிகள் சேக் முஹம்மது, பாக்கர், சிராஜூதீன், கோஸ் முஹம்மது, காங். கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் கான், முஸ்லீம் லீக் லெப்பை தம்பி, புதிய தமிழகம் கலீல் மற்றும் கூட்டணி கட்சி களை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி: திரு. அஸ்கர் அலி, திமுக

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment