(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 24, 2016

ராமநாதபுரம் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் தீ விபத்து, தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு!!

No comments :
ராமநாதபுரம் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மாவட்டம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

ராமநாதபுரம் அரண்மனை அருகே மில்லர் பங்களா சாலையில் பி.எஸ்.என்.எல்.தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு 2ஆவது மாடியில் தரைவழித் தொடர்பு மற்றும் இணையம் தொடர்பான சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளன. இத் தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை ஜன்னல் வழியாக திடீரென புகை வெளியேறியது. இதைக்கண்ட அலுவலர்கள், ஊழியர்கள் உடனடியாக வெளியே ஓடிவந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.   

தகவலறிந்து வந்த ராமநாதபுரம் தீயணைப்புக் கோட்ட அலுவலர் முரளி தலைமையிலான வீரர்கள் 2ஆவது மாடிக்குள் நுழைய முயன்றனர். ஆனால், புகைமூட்டம் மற்றும் துர்நாற்றம் காரணமாக நுழைய முடியவில்லை. பின்னர் கார்பன்டை ஆக்ஸைடு நிரப்பப்பட்ட புகையை கக்கும் கருவியை பயன்படுத்தி வயர்கள்,பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றின் மீது பீய்ச்சியடித்து புகை மூட்டத்தை அணைத்தனர்.


இதனால்  மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைப்பேசி இணைப்புகள் செயலிழந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment