(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 27, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் நாள் 40 பேர் வேட்பு மனு தாக்கல்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் முதல் நாளான திங்கள்கிழமை 40 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் திங்கள்கிழமை முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 170 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.  

முதல் நாளான திங்கள்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் அன்பு பகுருதீன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேவிபட்டினம் பகுதி கவுன்சிலராகவும் இருந்து வரும் இவர், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இவர்  ஒருவர் மட்டுமே ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மொத்தம் 3075 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

முதல் நாளான திங்கள்கிழமை வார்டு உறுப்பினர் பதவிக்கு 39 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 3910 உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட வேண்டியுள்ள நிலையில் முதல் நாளான திங்கள்கிழமை 40 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment