(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 20, 2016

ராமநாதபுரத்தில் வரும் அக்-23ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதும் போட்டி!!

No comments :
இந்திய அஞ்சல் துறையின் சார்பில் வரும் 23 ஆம் தேதி ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிரதமருக்கு கடிதம் எழுதும் போட்டி நடைபெற இருப்பதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் என்.ஜே. உதயசிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

பள்ளி மாணவர்கள் தங்கள் கனவுகள் மற்றும் விருப்பங்களை பாரதப் பிரதமருடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக மாணவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படவுள்ளது. ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் நேஷனல் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இம்மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை போட்டி நடைபெறும்.


இந்தியாவின் பன்முகத்தன்மையே வலிமை என்ற தலைப்பில் பாரதப்பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும். 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம். கடிதம் எழுதத் தேவையான உள்நாட்டுக் கடிதம், தபால்தலை ஆகியன இலவசமாக வழங்கப்படும். 

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் கடிதங்கள் எழுதலாம்.
முதல் மூன்று பேர் பரிசுக்கு தேர்வு செய்யப்படுவர். கோட்ட அளவில் தேர்வு செய்யப்படும் 5 கடிதங்கள் மதுரை மண்டல அளவில் தேர்வு செய்யப்படும். 

போட்டியில் பங்கேற்க விரும்புவோர்கள் தங்களது அடையாள அட்டையுடன் நேரில் வந்து கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment