(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 27, 2016

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழந்தார்!!

No comments :
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை பெண் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழந்தார்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததாலேயே உயிரிழந்ததாக கணவர் புகார் தெரிவித்துள்ளார்.   

ராமநாதபுரம் அருகே தெனனவனூர் பகுதி டி.கண்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் மனைவி அனிதா (29). இவர் பிரசவத்துக்காக கடந்த 20 ஆம் தேதி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 21 ஆம் தேதி, இவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.  அதையடுத்து, கடந்த 25 ஆம் தேதி இரவு அனிதாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால், அனிதா உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வாசுதேவன் கூறியதாவது: 

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அனிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பலமுறை மருத்துவரை அழைத்தபோதும் யாரும் பணியில் இல்லை. தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும் மறுத்துவிட்டனர்.    இதன் காரணமாக, என் மனைவி உயிரிழந்துவிட்டார். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழந்திருப்பது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்படும். விசாரணையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment