(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 6, 2016

ராமநாதபுரம் நகர் பகுதிகளில் நவ.7 முதல் 14 வரை மின் விநியோகம் தடைபடும் இடங்களின் விபரம்!!

No comments :
ராமநாதபுரம் நகர் பகுதிகளில் மறுசீரமைக்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட மின்வளர்ச்சித் திட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் திங்கள்கிழமை முதல் 14 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜி.கங்காதரன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

நவ.7 மற்றும் நவ.10 ஆகிய தேதிகளில் சாலைத்தெரு, அக்ரஹாரம் ரோடு, வடக்குத் தெரு, அரண்மனை பகுதிகள், கோட்டைமேடு, கே.கே.நகர், சூரன்கோட்டை காலனி.

நவ.8. வண்டிக்காரத்தெரு, ஸ்ரீவழிவிடு முருகன் கோயில், சதக் சென்டர், புதிய பேருந்து நிலையம், ஜெகன் தியேட்டர், சந்தைக்கடை, வள்ளல் பாரி தெரு,ந கராட்சி மற்றும் தாலுகா அலுவலக பகுதிகள்.

நவ.11 வசந்தநகர், தாயுமானவர் சுவாமி கோயில் தெரு, இந்திரா நகர், சிகில் ராஜவீதி, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தெரு, நவ.12. மற்றும் நவ.14 ஆகிய தேதிகளில் சிங்காரத்தோப்பு, வடக்குத்தெரு, கொத்த தெரு, மூலக்கொத்தலம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், கே.கே.நகர், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி, சூரங்கோட்டை காலனி, சாலைத்தெரு, கே.கே.நகர், அக்ரஹாரம், அரண்மனைப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment