(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 19, 2016

பேருந்தில் கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகள் ராமநாதபுரத்தில் பறிமுதல், ஒருவர் கைது!!

No comments :
சென்னையிலிருந்து பேருந்தில் கொண்டு வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை ராமநாதபுரத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

இலங்கை கொண்டுச் செல்வதற்காக சென்னையிலிருந்து ஆம்னி பேருந்தில், ஆண்மையைத் தூண்டும் மாத்திரைகள், போதை மாத்திரைகள் உள்பட ரூ.1.50 லட்சம் மதிப்புளள பண்டல்கள் கடத்தி வரப்படுவதாக ராமநாதபுரம் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதன்பேரில் காவல்துறையினரும், உளவுப் பிரிவினரும் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட பேருந்தில் வந்த மாத்திரை பண்டல்களை வாங்க வந்த ராமநாதபுரம் இந்திரா நகர் வேலு மகன் ராஜேந்திரன்(35) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.  

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பண்டல்களில், போதை மாத்திரைகள் உள்பட 5 வகையான மாத்திரைகள் 10 பண்டல்கள் இருப்பதாகவும், இதன் மதிப்பு ரூ.1.50லட்சம் எனவும், சென்னையில் வசிக்கும் காதர் என்பவர் ராமேசுவரத்தில் உள்ள டேவிட் என்பவர் மூலமாக இம்மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த முயற்சி செய்திருப்பதாகவும் தெரியவந்தது. 

மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment