முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 28, 2016

மண்டபம் பகுதியில் மாணவர்களிடையே மோதல், மூவர் காயம்!!

No comments :
மண்டபம் அருகே பள்ளி விழாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சனிக்கிழமை இரவு மாணவர்கள் மீண்டும் மோதிக்கொண்டதில் மூவர் காயம் மடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே நடுமனைக்காடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் மண்டபம் சேது நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் முரளிதரன் (16), இத்ரிஸ்கான் மகன் இம்ரான்கான்(15), சீனி இபுராஹிம் மகன் இசாகான்(16) ஆகிய மூவரும் படித்து வருகின்றனர்.



இப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் முரளிதரனுக்கும், இம்ரான்கான், இசாகான் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நான்கு நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு மண்டபம் பகுதியில் மூவரும் கத்தி, பிளேடால் தாக்கிக் கொண்டனர்.

இதில் காயமடைந்த முரளிதரன் தனியார் மருத்துமனையிலும் மற்ற இருவரும் அரசு மருத்துமனையிலும் கிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் இம்ரான்கான், இசாகானின் உறவினர்கள் சனிக்கிழமை இரவு  முரளிதரன் சிகிச்சை பெறும் தனியார் மருத்துமனையையும், அவரை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தையும் தாக்கியுள்ளனர். இதனால் மண்டபம் பகுதியில் பதற்றம் நிலவியது.  
இதையடுத்து ராமேசுவரம் காவல்துறை கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில்  போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.  மூன்று மாணவர்கள் மீதும் மண்டபம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)