முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 29, 2016

முஸ்லீம் லீக் வரலாறு (பகுதி-1)!!

No comments :
1142 ஆண்டுகள் இந்தியத் திருநாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்துள்ளனர். முகலாய சக்கரவர்த்திகளின் காலத்தில் இந்திய துணை கண்டமே அவர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.

ஆயினும் 592 ஆண்டுகள் முஸ்லிம் மன்னர்களுக்கு தலைநகராக இருந்த டெல்லி உட்பட இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பது மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் அனைத்திலும் பின்தங்கியுள்ளனர்.

ஆக முஸ்லிம் மன்னர்கள் முஸ்லிம்களுக்காக ஆளவும் இல்லை; இஸ்லாத்தை பரப்புவது அவர்கள் நோக்கமும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.


முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்டது ஏன்? 
1600
டிசம்பர் 31

பேரரசர் அக்பர் ஆட்சி செய்து கொண்டிருந்த போதுதான் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறது.
1799
மே 4 மைசூர் போரில் மாவீரன் திப்பு சுல்தானின் வீரமரணத்தை அடுத்து 1806 ஜுலை 10ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் புரட்சிதான் ஆங்கில ஏகாதி பத்தியத்தை விரட்டும் இந்திய சுதந்திர வேட்கைக்கு அடித்தளம் அமைத்தது.

1857 –
இந்திய வரலாற்றில் திருப்புமுனை ஆண்டு! முகலாயப் பேரரசர் பஹதூர்ஷா தலைமையில் முதல் சுதந்திரப் போர் வெடித்தது.
அக்கிளர்ச்சி அடக்கப்பட்டு பஹதூர்ஷா கைது செய்யப்பட்டதும் இது இந்தியர்களின் உள்ளத்தில் தேசிய உணர்வை கொளுந்து விடச் செய்தது. 
கிளர்ச்சி அடக்கப்பட்டதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

1858
நவம்பர் 1 – அலகாபாத்தில், விக்டோரியா மகாராணியின் அறிக்கையை கவர்னர் ஜெனரல் கானிங் பிரபு சமர்ப்பித்தார்.
ஆங்கிலேயர்களைப் போல் இந்தியர்களும் சமமாக நடத்தப்படுவர்; மதவிஷயங்களில் அரசு தலையிடாது; கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு என உறுதி கூறப்பட்டது. 

1861-
ல் இந்தியன் கவுன்சில் ஆக்ட்என்ற பெயரில் ஆங்கிலேயர் வெளியிட்ட சட்டப்படி, கவர்னர் ஜெனரல் சபையில் பாதியிடம் இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
ஆனால் இவை அனைத்தும் முஸ்லிம்கள் விஷயத்தில் பொய்த்துப் போனது. 


முதல் சுதந்திரப் போரை முஸ்லிம்கள் முன்னின்று நடத்தினார்கள் என்பதற்காக ஆங்கிலேயர்களால் பழிவாங்கப்பட்டனர்.
அனைத்து பதவிகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் முஸ்லிம்கள் நீக்கப்பட்டனர். அவர்களின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு தண்டமாக அபகரிக்கப்பட்டது. மத்ரஸாக்கள் நசுக்கப்பட்டன.
இதனால் பொருளாதாரம் கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கினர்.

ஆங்கிலேயர் மீது கோபத்திலும் ஆங்கிலம் கற்பது ஹராம் என்ற நிலையிலும் முஸ்லிம்கள் இருந்த போது
1884-
ல் வைசி ராயாக இருந்த டஃபரின்பிரபு மக்களுக்கும் அரசுக்கும் இணைப்பு பாலமாக இருக்கும் அமைப்பை உருவாக்க ஆலோசனை வழங்கினார்.

அவரது ஆலோசனையின்படி 1885 டிசம்பர் 28-ல் யு.எஸ். பானர்ஜி தலைமையில், ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயே அதிகாரி இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார்.
காங்கிரஸின் முதலாவது மாநாட்டில் இந்திய அரசு ஊழியர் அனைவரும் இந்தியர் மயமாக்கப்பட வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டிருந்தது  ஆனால் அதன் பலன் முற்பட்ட சமூகத்தை மட்டுமே சென்றடைந்தது.
இதைப்பற்றி தீவிரமாக சிந்தித்தார் சர் சையத் அகமத்கான். 

முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முஸ்லிம் கல்வி மாநாட்டை உருவாக்கினார். 1886ல்-ம் ஆண்டில் அலிகரில் முஹம்மடன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை தொடங்கினார். இதுவே பின்னாளில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகமாக வளர்ந்தது.

ஆங்கிலேயர் பிரித்தாளும் சூழ்ச்சியை ஏற்படுத்தினர் . இதனால் இந்து முஸ்லிம் கலவரங்கள் உருவாயின. 

1894-
ல் சர் சையத் அகமத்கான், நவாப் முஹ்ஸினுல் முல்க் ஆகியோர் முஸ்லிம் பொலிடிகல் அஸோஸியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினர்.  


(தொடரும்....)

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)