முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 30, 2016

முஸ்லீம் லீக் வரலாறு - பகுதி-2!!

No comments :

1906-ம் ஆண்டு மின்டோ பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தார். அச்சமயம் பிரிட்டனில் இந்திய விவகார அமைச்சராக இருந்த மார்லி பிரபு இந்தியாவில் சீர்திருத்தங்கள் செய்யப்பட இருப்பதை அறிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க முஸ்லிம்கள் திட்டமிட்டனர்.

1906
அக்டோபர் 1ல் சிம்லாவில் தங்கியிருந்த மிண்டோ பிரபுவை சர் ஆகாகான் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்து முஸ்லிம்களின் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இவை நிச்சயம் பரிசீலிக்கப்படும் என வைஸ்ராய் உறுதி அளித்தார். 
சிம்லா தூதுக்குழுவின் முக்கியதுவத்தை உணர்ந்த நவாப் சலீமுல்லாஹ் கான் 1906 நவம்பர் 6 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். முஸ்லிம்களுக்கு தனி அரசியல் அமைப்பு வேண்டியதன் அவசியத்தை அதில் அவர் உணர்த்தியிருந்தார்.

அகில இந்திய முஸ்லிம் லீக் உதயம் 1906 டிசம்பர் 30
இன்றைய வங்க தேச தலைநகர் டாக்காவில் நவாப் வாக்காருல் முல்க் தலைமையில் அகில இந்திய முஸ்லிம் கல்வி மாநாடு கூட்டப்பட்டது.
முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்க ஓர் அரசியல் கட்சி வேண்டும் என்ற கோரிக்கையை நவாப் சலீமுல்லா கான்இக்கூட்டத்தில் வலியுறுத்தினார். 

அது அனைவராலும் ஏற்கப்பட்டது. இதற்கான முறைப்படி தீர்மானத்தை டில்லி ஹக்கீம் அஜ்மல் கான் முன் மொழிந்தார். நவாப் முஹ்ஸினுல் முல்க் வழிமொழிந்தார்

அகில இந்திய முஸ்லிம் லீக்’’ அன்று உதயமானது.
1906
டிசம்பர் 31
அகில இந்திய முஸ்லிம் லீகின் முதல் கூட்டம் நவாப் வக்காருல் முல்க் தலைமையில் நடைபெற்றது. 


சர் சுல்தான் முஹம்மது ஷாஹ் ஆகாகான் தலைவராகவும், நவாப் முஹ்ஸினுல் முல்க், நவாப் வக்காருல் முல்க் ஆகியோர் பொதுச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முஸ்லிம் லீகிற்கு சட்டதிட்டங்கள் அமைக்க மௌலான முஹம்மதலி ஜவஹர் அவர்களை பொறுப்பாளாராக்க கொண்டு குழு அமைப்பட்டது.
இளம்பிறையும், ஜந்து முனை கொண்ட நட்சத்திரம் இடதுபுற மூலையில் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக் கொடி முஸ்லிம் லீகின் கொடியாக வடிவமைக்கப்பட்டது.

1907 டிசம்பர் 29ல் கராச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் முதலாவது மாநாட்டில் கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம் சமுதாயத்தின் பின் தங்கிய நிலை பற்றி பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
1908 மார்ச் 18-ல் அலிகரிலும், டிசம்பர் 30,31 அமிர்தரஸிலும் நடைபெற்ற மாநாடுகளில் நீதித்துறை, அரசுப்பணிகள், கல்வி, பாடநூல் குழு, உள்ளாட்சி அமைப்புகள், வைஸ்ராய் மற்றும் மாகான ஆளுனர்களின் ஆலோசனை கமிட்டிகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரப்பட்டது.

இதன் விளைவாக கிடைக்கப் பெற்றதே மிண்டோ -மார்லி சீரிதிருத்தம்என்ற 1909-ம் ஆண்டு இந்தியன் கவுன்ஸில் சட்டம்.
1913 அக்டோபர் 10-ல் முஸ்லிம் லீகில் சேர்ந்த காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னாஹ் 1935-ல் தான் அதன் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1921 டிசம்பர் அஹமதாபாத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீகின் 14வது மாநாட்டில் இந்தியாவிற்கு பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் ஹஸரத் மோகானி அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

1940 மார்ச் 23-ல் லாகூர் மாநாட்டில்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடமேற்கு, வடகிழக்கு மாகானங்கள் தனி ராஜ்யமாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அதையும் 1946 ஜுன் 6 ல் நடந்த கூட்டத்தில் கைவிட முடிவு செய்யப்பட்டது.

இந்திய சுதந்திர போராட்டமும் பிரிவினை கோரிக்கையும் உச்ச கட்டத்தை எட்டின. 

1947
மார்ச் 24-ல் மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய வைஸ்ராயாக பதவி ஏற்றதும் தேசப்பிரிபினைக்கான செயல் வடிவம் தீட்டப்பட்டது. இதற்கான பொறுப்பு வி.பி. மேனனிம் ஒப்படைக்கப்பட்டது.

வி.பி. மேனன் தயாரித்த திட்டத்தை பிரிட்டிஷ் அரசு ஏற்றது 1947 ஜுன் 2ம் தேதி டெல்லி வைஸ்ராய் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் நேரு, பட்டேல், ஆச்சசார்ய கிருபளானி ஆகியோர் காங்கிரஸ் சார்பிலும்,
முஹம்மதலி ஜின்னாஹ், லியாகத் அலிகான், அப்துர் ரவூப் நிஷ்தார் ஆகியோர் முஸ்லிம் லீக் சார்பிலும் பல்தேவ்சிங் சீக்கியர் சார்பிலும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டனர்.

(தொடரும்...)



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் விழா!!

No comments :
மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் விழா ஆட்சியர் நட்ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விடுதலை போராட்ட வீரரும் இராமநாதபுரம் சமஸ்தாணம் மன்னருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த தின விழாவை முன்னிட்டு இன்று காலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் நடராஜன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.




உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காந்தி மற்றும் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இராம்பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரையில் கல்லூரி மாணவரை கொல்ல முயன்றவர் கைது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கல்லூரி மாணவரை கொல்ல  முயன்றவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சேர்ந்தவர் ஹபீப் முஹம்மது மகன் முஹம்மது மகாசின்(27). இவர் கடற்கரை அருகே குடி போதையில் இருந்துள்ளார். அவரை, அந்த வழியாக வந்த கேட்டரிங் கல்லூரி மாணவர் நபில்மரைக்காயர்(17) கிண்டல் செய்துள்ளார்.  


இதன் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், முஹம்மது மகாசின்  அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து நபில் மரைக்காயரை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து புகாரின் பேரில் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து முஹம்மது மகாசினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)