முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 16, 2016

பாம்பனில் இன்று 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது!!

No comments :

லங்கைக்கு அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை அடுத்து, நாகை, பாம்பனில் இன்று 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.



குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வருவதால், தமிழகத்தின் தென் மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், நாகை மற்றும் பாம்பன் துறைமுகங்களில் இன்று மதியம் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கோ 2 - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்து பல படங்கள் வந்துள்ளது. இதில் அமைதிப்படை, முதல்வன், கோ என ஒரு சில படங்களே நிகழ்கால அரசியலை தைரியமாக மக்களுக்கு கூறிய படம்.

இதில் கோ கடந்த தேர்தலின் போது வெளிவந்து மிகப்பெரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்சியாக இந்த தேர்தலுக்கு கோ 2 வெளிவந்துள்ளது.கதைக்களம்கோ படத்திற்கும் இந்த படத்திற்கும் சம்மந்தமே இல்லை.

ஆனால், டைட்டில் வைத்ததற்காகவே சிறகுகள் கட்சி வீழ்ச்சியடைந்து மீண்டும் பிரகாஷ்ராஜ் முதல்வரானார் என்ற வசனம் வருகின்றது. அறிமுக இயக்குனர் சரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.பாபி சிம்ஹா படத்தின் ஆரம்பத்திலேயே தமிழகத்தின் முதலமைச்சர் பிரகாஷ்ராஜை கடத்துகிறார். தமிழகமே பதட்டமாக போலிஸ் படையுடன் பாபி இருக்கும் இடத்தை வந்து சேர்கிறது.உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்கு முதலமைச்சரை கடத்துனீர்கள்? என்று கேட்க, பாபி மிகவும் சிறுபிள்ளை தனமாக காரணங்களை சொல்கிறார்.



அது அரசாங்கத்திற்கு சிறுபிள்ளை தனமாக இருந்தாலும், பெரிய விஷயத்தை சிம்பிளாக பாபி சொல்ல முயற்சிக்கிறார்.இதை தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மைகளை பாபி முதலமைச்சரை தன் கட்டுப்பாட்டில் வைத்து வெளிக்கொண்டுவருவதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்பாபி சிம்ஹா தேசிய விருது நாயகன், அழுத்தமான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்தால் அவரும் கமர்ஷியலுக்குள் குதித்துவிட்டார். நாட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் பெரிய காரணம் இருக்கு என்பதை முதலமைச்சரிடம் விளக்கும் காட்சியில் அப்லாஸ் அள்ளினாலும், ரொமான்ஸ், டூயட் எல்லாம் கொஞ்ச நாளைக்கு வேண்டாம் ப்ரோ.
பிரகாஷ்ராஜ் அவரே மொத்த படத்தையும் தாங்கி நிற்பார் என்று எதிர்ப்பார்த்தால், கொஞ்சம் ஏமாற்றம் தான். இத்தனை பெரிய நடிகரை ஒரு சேரில் உட்கார வைத்து பேச மட்டும் வைத்துவிட்டார்கள். நிக்கி கல்ராணியும் ஒரு ப்ளாஷ் பேக் டூயட், அவ்வப்போது மைக் பிடித்து பேசுகிறார், பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை.

முதலமைச்சரை கடத்த இவர்கள் போடும் ப்ளான் அதற்கு உதவி செய்யும் பாலசரவணன் என பல லாஜிக் மீறல்கள். அதிலும் பாலா சொல்லும் ப்ளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் படத்திற்கு தேவை தானா?.ஆனால், எது எப்படியோ பல காட்சிகள் பிரபல கட்சிகள் செய்யும் கலாட்டாவை வெளுத்து வாங்கியுள்ளது.

இதற்கு எல்லாம் தனி தைரியம் வரவேண்டும், அதற்காக மனம் திறந்து பாராட்டலாம். அதிலும் இளவரசு ஒரு அமைச்சரை நம் கண்முன் கொண்டு வருகிறார்.படத்தின் ரியல் ஹீரோ இசையமைப்பாளார் லியோன் தாமஸ் தான், பின்னணி பாடல்கள் என அனைத்திலும் கலக்கியுள்ளார். இன்னும் பல படங்கள் பணியாற்ற வாழ்த்துக்கள் சார்.கோ படத்தில் மக்களின் மொத்த பிரச்சனைக்கும் போராடுவது போல் இருக்கும், இதில் தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனையை வைத்து மையக்கதையை நகர்த்திருப்பது கொஞ்சம் யதார்த்தத்தை விட்டு தள்ளி நிற்கின்றது.


அரசாங்கத்திற்கு சாட்டையடி அதிலும் தேர்தல் நேரத்தில்.படத்தின் இசை, இரண்டாம் பாதி, கருணாகரன் முதன் முதலாக காமெடி தவிர்த்து சிறிது நேரம் வந்தாலும் ஈர்க்கிறார்.இளவரசு வாயிலாகவே அரசாங்கத்தை பற்றிய கிண்டல் கேளிகளை பாபி சிம்ஹா வெளியே கொண்டு வரும் காட்சி.


காமெடியை விட அனைவரும் கவனிக்கவேண்டிய இடம்.பல்ப்ஸ்படத்தின் முதல் பாதியில் வரும் தேவையற்ற ப்ளாஷ்பேக் காட்சிகள்.லாஜிக் மீறல்கள், முதலமைச்சரை கடத்துகிறார் என்று கூறும் போதே அத்தனை சீரியஸான விஷயத்தை இன்னும் கொஞ்சம் வேகமாக கொண்டு சென்றிருக்கலாம்.மொத்தத்தில் இதுவரை சினிமாவில் கூட கேட்க முடியாத சில கேள்விகளை முதன் முறையாக தைரியமாக கேட்டதற்காகவே ஒரு முறை சென்று வரலாம்.

விமர்சனம்: தமிழ் ஃபில்ம் நியூஸ்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

தேர்தல் திருவிழா - ராமநாதபுரம் மாவட்டத்தில் 11,01,418 வாக்காளர்கள், 68 வேட்பாளர்கள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 11,01,418 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 1,307 வாக்குச்சாவடிகள் உள்ளன.

வாக்காளர்கள் தேர்தலில் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்தி துணைராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

தமிழகத்தில் இன்று (16–ந் தேதி) சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில்
ராமநாதபுரம்,
பரமக்குடி(தனி),
முதுகுளத்தூர்,
திருவாடானை

என 4 சட்டமன்ற தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

மாவட்டத்தில் உள்ள மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகளில்,
பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,22,050 ஆண் வாக்காளர்களும், 1,23,429 பெண் வாக்காளர்களும், 19 இதர வாக்காளர்களும், 480 பணித்தொகுதி வாக்காளர்களும் உள்ளனர்.

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 1,37,440 ஆண் வாக்காளர்களும், 1,35,985 பெண் வாக்காளர்களும், 28 இதர வாக்காளர்களும், 191 பணித்தொகுதி வாக்காளர்களும் உள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியில் 1,41,900 ஆண் வாக்காளர்களும், 1,42,412 பெண் வாக்காளர்களும், 18 இதர வாக்காளர்களும், 72 பணித்தொகுதி வாக்காளர்களும் உள்ளனர்.

முதுகுளத்தூர் தொகுதியில் 1,49,225 ஆண் வாக்காளர்களும், 1,47,680 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும், 481 பணித்தொகுதி வாக்காளர்களும் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் 5,50,615 ஆண் வாக்காளர்களும், 5,49,506 பெண் வாக்காளர்களும், 73 இதர வாக்காளர்களும், 1,224 பணித்தொகுதி வாக்காளர்களும் உள்ளனர்.

இவ்வாறு மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 11,01,418 வாக்காளர்கள் உள்ளனர்.



ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2–ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ள இறுதி வேட்பாளர்கள் பட்டியலின்படி மாவட்டத்தில் உள்ள
பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்களும்,
திருவாடானை தொகுதியில் 21 வேட்பாளர்களும்,
ராமநாதபுரம் தொகுதியில் 17 வேட்பாளர்களும்,
முதுகுளத்தூர் தொகுதியில் 15 வேட்பாளர்கள்

என மொத்தம் 68 வேட்பாளர்கள் களத்தில் நின்று போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவுக்காக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 1,307 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளுக்கு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வேட்பாளர்களின் எண்ணிக்கையின்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 346,
திருவாடானை தொகுதிக்கு 738,
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 738,
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 419 என மொத்தம் 2,241 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. 

அதேபோல, வாக்குப்பதிவு எந்திர கட்டுப்பாட்டுக் கருவிகள்,
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 346,
திருவாடானை தொகுதிக்கு 369,
ராமநாதபுரம் தொகுதிக்கு 369,
முதுகுளத்தூர் தொகுதிக்கு 419

என மொத்தம் 1,503 கட்டுப்பாட்டுக் கருவிகளும் அனுப்பப்பட்டு உள்ளன.

வாக்குப்பதிவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் உள்பட 3,342 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தலையொட்டி வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

செய்தி: தினத்தந்தி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)