முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 14, 2016

பரமக்குடி பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பேருந்து உள்ளே வந்து செல்ல கோரிக்கை!!

No comments :
எப்போது மாறும் இந்த நிலைமை?

பரமக்குடி பேருந்து நிலையத்தில் இரவு மணியிலிருந்து இராமநாதபுரம், இராமேஸ்வரம் பேருந்துகள் நிலையத்திற்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே காத்திருக்க வேண்டிய கட்டாயத்தை பரமக்குடி போக்குவரத்து நிர்வாகம் பயணியர்களுக்கு உருவாக்கி இருப்பது அவதியை ஏற்படுத்துவதாகவே உள்ளது.



இரண்டு குழந்தைகளுடன் நிற்கும் கணவன்மனைவி நிலைமையும், கர்ப்பிணிகளது, மற்றும் வயதானவர்களது நிலைமையும் மிகுந்த அலக்கழிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்நிலையானது நெடுஞ்சாலையில் தேவையற்ற வாகன நெரிசலையும் சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கு அவதியை தருகின்றது. இந்நிலையை தடுத்து இரவோ-பகலோ எந் நேரமாயினும் பேருந்துகள் நிலையத்துக்குள்ளேயே பயணியர்களை ஏற்றிவரவும்-இறக்கிவிடவும் உத்தரவிட மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து காவலர்களும் ஆவணம் செய்ய இதன் வழியே வலியுறுத்துகிறேன்.

இப்படிக்கு
சேக் அப்துல்லா

பரமக்குடி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)