முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 20, 2016

இராமநாதபுர சந்தையில் வியாபாரிகளுக்கு போதிய வசதி செய்து தர கோரிக்கை!!

No comments :
இராமநாதபுரத்தில் புதன் கிழமை தோறும் கூடும் சந்தையில் வியாபாரிகளுக்கு வெயிலிருந்து பாதுகாக்கதக்க இடம் வசதியை நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டுமென வியாபாரம் செய்யும் வியாபார பெருங்குடிமக்கள் கோருகின்றனர்.


கடந்த ஆண்டு வாரச் சந்தை கூடுமிடத்தில் மூடிய நிலையில் இருந்த அறைகள் பாதுகாப்பின்மை எனும் காரணம் கூறி இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இன்று வரையிலுமே பாதுகாப்பான மூடிய அறைகள் கட்டித்தாராமல் இருப்பது வேதனையளிப்பதாக சந்தை வியாபாரிகள் குமுறுகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் அவ்விடத்தில் மீண்டும் பாதுகாப்பான அறைகளை கட்டித்தந்து வியாபாரிகளை வெட்ட வெளியில் கடும் வெளியிலிருந்து பாதுகாக்க வேண்டுமென கோருகிறார்கள்.

அன்புடன்,

அ. சேக் அப்துல்லா
இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)