முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 3, 2016

கீழக்கரையில் நவ., 19, 20ல் மாநில அளவில் சிறுவர் செஸ் போட்டி!!

No comments :
கீழக்கரையில் நவ., 19, 20ல் மாநில அளவில் சிறுவர் செஸ் போட்டி நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன், கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லுாரி இணைந்து மாநில அளவில் நடத்தும் குழந்தைகளுக்கான முதலாவது செஸ் போட்டி, கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லுாரியில் நவ., 19, 20ல் நடக்கிறது.

இதில் 9, 11, 13, 15 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.



ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடம் பிடிப்போருக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது. பங்கேற்க விரும்புவோர் 94431 34135 என்ற அலைபேசி எண்ணில் அல்லது chess.ramnad@gmail.com என்ற இணைய தள முகவரில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட செயலர் ராக்லாண்ட் மதுரம் தெரிவித்துள்ளார்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

தனுஷ்கோடி பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற, அப்பகுதி மக்கள் நவம்பர் 10ஆம் தேதிக்குள் வெளியேற நோட்டீஸ்!!

No comments :
தனுஷ்கோடி பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு நவம்பர் 10ஆம் தேதிக்குள் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டுமென வட்டாட்சியர் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் கொடுத்துள்ளதால் மீனவர்களும், வணிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ராமேசுவரம் பகுதியிலிருந்து 22 கி.மீட்டர் தொலைவில் தனுஷ்கோடி அமைந்துள்ளது. இந்தப் பகுதி கடந்த 51 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைஇந்தியாவின் வர்த்தக நகரமாக இருந்துள்ளது. அப்போது ஏற்பட்ட பெரும் புயலால் தனுஷ்கோடி நகரமே அழிந்து போனது. அதன்பின்னர் உயிர்தப்பிய மீனவர்கள் மட்டும் இன்றுவரை அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.




இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையேற்று எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத அப்பகுதியில் மத்தியமாநில அரசுகள் சாலை வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல தனுஷ்கோடி பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு மத்திய,மாநில அரசுகள் நடடிக்கை எடுத்து வருகின்றது.

அதன்பேரில், புயலால் அழிந்துபோனது போக மீதமுள்ள கட்டடங்களை புதுப்பித்தும், தனுஷ்கோடி வரலாறு குறித்து ஒளிஒலியுடன் கூடிய கண்காட்சி அமைக்கவும் அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.  

இதனால் அப்பகுதியில் வசிக்ககூடிய மீனவர்களை வெளியேற்ற மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. 

இதற்காக 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக குடிசை அமைத்து, மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களை நவம்பர் 10ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டுமென ராமேசுவரம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் அவர்களுக்கு நோட்டீஸ் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது.  இதை பெற்றுக்கொண்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தனுஷ்கோடி பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் மற்றும் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் கடைகள் வைத்துள்ள வணிகர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் விபத்து, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

No comments :
இராமநாதபுரம் - தூத்துக்குடி ஈ.சி.ஆர் ல் இராமநாதபுரத்தீல் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திருப்புல்லானி செக்போஸ்ட்டீற்கு அருகில் இன்று காலை 8.15 மணியளவில் ஈராமநாதபுரம் நோக்கி வந்த பவாணி தணியார் பேரூந்தும் எதிரே வந்த சின்ன கண்டெய்னர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்ட்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.




காயமடைந்தவர்கள் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர்.


கீழக்கரை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி திருப்புல்லானி சார்பு ஆய்வாளர் வேதவள்ளி தலைமையீல் காவல்துறையினரும் பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)