முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 26, 2016

ராமநாதபுரத்தில் கஞ்சா விற்ற 3 நபர்கள் கைது!!

No comments :
ராமநாதபுரத்தில் கஞ்சா விற்ற 3 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராம பகுதியில் கஞ்சா விற்பதாக கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, வாலாந்தரவையை சேர்ந்த கார்த்திக்(30), வினோத்குமார்(28), ஆற்றாங்கரையை சேர்ந்த சரவணன்(30) ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது.

தொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)