(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, January 24, 2017

ராமநாதபுரத்தில் மாணவர்களின் போராட்டம் வாபஸ்!!

No comments :
ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை  மாணவர்களின் போராட்டம் போலீஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க வாபஸ் பெறப்பட்டது.

ராமநாதபுரத்தில் இளைஞர்கள் பாரம்பரிய மீட்புக் குழு என்ற பெயரில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் பட்டினம்காத்தான் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக கடந்த 5 நாள்களாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் குடிநீர் வசதி, உணவு வசதி ஆகியனவற்றை செய்து கொடுத்தனர். திங்கள்கிழமை அதிகாலை ராமநாதபுரம் ஏ.எஸ்.பி. சர்வேஷ்ராஜ் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்றிருப்பதை எடுத்துக்கூறினர்.


இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, இளைஞர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருநத பந்தல்களையும் காவல்துறையினர் பிரித்து சுருட்டி வைத்தனர்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment