(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, January 16, 2017

ராமநாதபுரம் அருகே தடையை மீறி எருதுகட்டு!!

No comments :
ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடி கிராமத்தில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை நடந்த எருதுகட்டு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடி கிராமத்தில் சிலை எடுத்த அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் எருதுகட்டு விழா மாட்டுப்பொங்கலன்று நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரு ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தடை காரணமாக எருதுகட்டு விழா நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் காஞ்சிரங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை  தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் திருமுருகன் தலைமையில் எருதுகட்டு நடைபெற்றது. வழக்குரைஞர் டேவிட், பத்மனாபன், ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கயிற்றின் ஒரு முனையை மாட்டின் கழுத்தில் கட்டி மற்றொரு முனையை மாட்டின் உரிமையாளர் பிடித்துக் கொள்ளும் வகையிலான எருதுகட்டு நிகழ்ச்சி நடந்தது.

இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். நிகழ்ச்சி நடைபெற்றது காவல்துறைக்கு தகவல் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment