(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 12, 2017

பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் சமுதாய கழிப்பிட கட்டிடம்!!

No comments :
ராமநாதபுரம் தாயுமானசாமி கோவில் தெருவில் பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் சமுதாய கழிப்பிட கட்டிடம் உள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம் நகராட்சி பகுதிகளில் தொற்றுநோயை தடுக்கும் விதமாக திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக நகரில் சுகாதார வளாகங்கள் பல கட்டப்பட்டுள்ளன. இருப்பினும் அவைகள் முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் தாயுமானசாமி கோவில் தெருவில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் ரூ.20 லட்சம் செலவில் சமுதாய கழிப்பிட கட்டிடம் கட்டப்பட்டது.

கடந்த ஒரு வருட காலமாக இந்த கட்டிடம் திறப்புவிழா காணாமல் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அதை பயன்படுத்த முடியவில்லை. நகர் பகுதியில் ஒருசிலர் வீடுகளில் கழிவறை வைத்திருந்தாலும் பலர் திறந்த வெளியையே கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

திறப்புவிழா காணாமல் இந்த கட்டிடம் உள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்த வருகின்றனர்.  விரைவில் கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவ்சர்கள் கூறுகையில், ‘தற்போது புதிதாக வீடு கட்டுபவர்கள் தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டி வருகின்றனர். குடிசைகளில் வசிப்போர் பலர் இதுபோன்ற பொது கழிப்பறையையே நம்பியுள்ளோம். புதிய கழிப்பறை திறப்புவிழா காணாமல் உள்ளதால் யாருக்கும் பயன் இல்லை.  இதனால் பலரும் திறந்த வெளியை அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் பயன் இல்லாமல் உள்ளதுஎன்றார்.


அதிகாரிகள் கவனிப்பார்களா?

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment