(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 22, 2017

ராமநாதபுர மாவட்டத்தில் நிலவிய மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி!!

No comments :
ராமநாதபுரத்தில் நேற்று காலை நிலவிய மூடுபனியால் வாகன ஓட்டிகள் தடுமாறினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

இரவு 8:00 மணி முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை நிலவும் பனிப்பொழிவால் குளிர் வாட்டி வதைக்கிறது. பனிப்பொழிவுக்கு பயந்து காலை 8:00 மணிவரை வெளியே நடமாட அஞ்சி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிவிடுகின்றனர். வேலைக்கும், கடைவீதிகளுக்கும் செல்வோர் ஸ்வெட்டர், பனிக்குல்லா அணிந்து செல்கின்றனர்.




இந்த நிலையில், நேற்று காலை மூடுபனி நிலவியது. இதன்காரணமாக எங்கு பார்த்தாலும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது. எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறினனர். முகப்பு விளக்கு மற்றும் மஞ்சள் விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் சென்றதை காணமுடிந்தது. அதிகாலை 3:00 மணி முதல் காலை 8:00 மணிவரை மூடுபனி நீடித்தது.

இதே பனிப்பொழிவு ராமேஸ்வரம், ஆர்.எஸ்.மங்கலம், கீழக்கரை, சாயல்குடி, கமுதி, பரமக்குடி உள்பட மாவட்டம் முழுவதும் நிலவியது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment