(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 6, 2017

மூன்று வாரங்களாக பூட்டியிருக்கும் கீழக்கரை “அம்மா” மருந்தகம்!!

No comments :
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள அம்மா மருந்தகம் கடந்த மூன்று வாரங்களாக பூட்டியிருப்பதால் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர்.

கீழக்கரை நகராட்சியில் 55 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம், பரமக்குடி நகராட்சிகளில் 15 சதவீதம் தள்ளுபடியில் ஏழை மக்கள் பயனடையும் வகையில், 'அம்மா மருந்தகங்களை கடந்த 2014 அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் உள்ள ராம்கோ நிறுவனத்தால் மருந்து, மாத்திரைகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது.

கீழக்கரையில் உள்ள அம்மா மருந்தகத்தில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது.

ஒரு பொறுப்பாளர், ஒரு பெண் பணியாளர் உள்ளனர். கடந்த மூன்று வாரங்களாக மருந்தகம் பூட்டியே கிடப்பதால் மருந்துகள் வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.


அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மருந்தகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment