(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 24, 2017

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு!!

No comments :
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் குப்பைகள் நிறைந்து கிடப்பதாகவும், கழிப்பறை சுகாதாரமின்றி நோய்களை பரப்பி வருவதாகவும், பஸ் நிலைய பகுதி முழுவதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்து பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு நெருக்கடியாக உள்ளதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து அமைச்சர் டாக்டர் மணிகண்டன் புதிய பஸ் நிலையத்திற்கு திடீரென சென்று பார்வையிட்டு அதிரடி சோதனை நடத்தினார்.

அப்போது பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாகவும், சுகதாரமானதாகவும் பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பஸ் நிலைய வளாக பகுதிகளில் ஆங்காங்கே நிறைந்து காணப்பட்ட குப்பைகளை உடனுக்குடன் காலைமாலை என இருவேளைகளிலும் அகற்ற உத்தரவிட்டார். பஸ் நிலைய பகுதிகளில் உள்ள நடைபாதையை கடை உரிமையாளர்கள் ஆக்கிரமித்து பார்த்து, அவர்களிடம் பயணிகளுக்கு இடையூறு இல்லாதவாறு உடனே அகற்ற கேட்டுக்கொண்டார்.


பின்னர் பஸ் நிலையத்தின் பின்பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதனை உடனடியாக அகற்றி சுத்தமாக பராமரிக்க உத்தரவிட்டார். மேலும், பஸ் நிலைய வாகன நிறுத்துமிடம் முறையான பராமரிப்பின்றி இருப்பதை கண்ட அமைச்சர் அதை சீரமைக்க திட்டம் தயாரித்து அனுப்புமாறும், தேவையான நிதி பெற்று பஸ் நிலைய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உதவி செய்வதாக தெரிவித்தார்.


வெயில் நேரம் என்பதால் பயணிகளின் தண்ணீர் தேவையை நிறைவேற்றும் வகையில் கூடுதல் இடங்களில் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யவும், தமிழக அரசின் சிறப்பு திட்டமாக அம்மா குடிநீர், பஸ் நிலைய பகுதியில் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகரசபை ஆணையாளர் அப்துல்ரசீத் மற்றும் நகரசபை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment