(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 26, 2017

ஆதார் அட்டையில் பெயர், முகவரி திருத்தங்கள் மேற்கொள்ள இ-சேவை மையங்களை அணுகலாம்!!

No comments :
ஆதார் அட்டையில் பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின் தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் நிரந்தர ஆதார் மையங்களை அணுகலாம் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம்மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்ய விரும்பினால்இந்த மையங்களுக்கு சென்று கைரேகை அல்லது கருவிழியினை பதிவு செய்து தங்களது பெயர்பிறந்த தேதிமுகவரிகைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம்.



மேலும் புகைப்படம், கைவிரல் ரேகை, மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்துக்கொள்ளலாம். ஆதார் பதிவு, 5 முதல் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை மறுபதிவு செய்வதற்கு எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
நிலைப்புள்ளி விவரங்களை (பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி) திருத்தம் செய்வதற்கு ரூ.25-ம், புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க ரூ.25-ம், ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக்கொள்வதற்கு ரூ.10-ம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், பொதுமக்கள் தவறாமல் ஒப்புகைச் சீட்டை மையத்தில் பணிபுரியும் தரவு உள்ளட்டாளரிடமிருந்து கேட்டு பெற்றுக் கொள்ளவும். சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டுமெனில் 1800 425 2911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment