(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 4, 2017

ஆதார் அட்டை சேவைக்கு கூடுதல் கட்டணல் வசூ;லித்த்தால் தொலைபேசி எண் 18004252911ல் புகார் செய்யலாம்!!

No comments :
அரசின் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பெயர் திருத்தம் உள்ளிட்டவற்றிற்கு அதிகபட்சம் ரூ.25 மட்டுமே பெறப்படுகிறது.
கூடுதல் கட்டணம் பெற்றால் கட்டணமில்லா எண்ணில் புகார் செய்யலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தம் ஏதும் இருந்தால் இந்த மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம். கைரேகை அல்லது கருவிழியை பயன்படுத்தி தங்களது பெயர், பிறந்ததேதி, பாலினம், முகவரி கைபேசிஎண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம்.

மேலும் புகைப்படம், கைவிரல்ரேகை, கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்து கொள்ளலாம்.

ஆதார்பதிவு செய்ய, 5முதல் 15வயது முடிந்தவர்களுக்கு கைவிரல் ரேகை, மறுபதிவு செய்தல் போன்றவற்றிற்கு எவ்வித கட்டணமும் இல்லை. பெயர், பிறந்ததேதி, பாலினம், முகவரி, கைபேசி, மின்னஞ்சல் போன்றவற்றை திருத்தம் செய்ய ரூ.25, புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க ரூ.25 பெறப்படுகிறது.
இதேபோல் ஆதார் விபரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக் கொள்ள ரூ.10 பெறப்படுகிறது.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கும் கட்டணம் கிடையாது. இந்த மையங்களில் வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டை மறக்காமல் கேட்டு பெற்று கொள்ள வேண்டும்.

சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment