(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 3, 2017

இலவச தையல் இயந்திரம் பெற ஏழை பெண்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழை பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழை பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வட்டாட்சியாரிடம் பெற்ற வருமான சான்று ரூ.72 ஆயிரத்திற்குள், வட்டாட்சியாரிடம் பெற்ற இருப்பிட சான்று அல்லது ரேஷன் கார்டு, பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று, (6 மாத கால பயிற்சி), வயது சான்று (20 முதல் 40 வயது வரை), கல்வி சான்று அல்லது பிறப்பு சான்று, சாதி சான்று, பாஸ்போர்ட் அளவு மனுதாரரின் கலர் புகைப்படம் 2, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளி பெண் சான்று நகல், ஆதார் அடையாள அட்டை ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
ராமநாதபுரம்

என்ற முகவரிக்கு வரும் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.


இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment