(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 28, 2017

ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரிசீயன் பயிற்றுநர் பணி வாய்ப்பு!!

No comments :
ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பில் செயல்படும் மின்சாரப்பணியாளர் தொழிற்பிரிவின் இளநிலை பயிற்சி அலுவலர் பணி தற்காலிகமாக பயிற்றுநர் நிலையில் ஒரு பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் பொதுப்பிரிவினர் முன்னுரிமையில் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இப்பணிக்கான கல்வித்தகுதி எலக்ட்ரிசீயன் தொழிற்பிரிவில் என்டிசிஎன்ஏசி அல்லது பட்டயப்படிப்பு இஇஇ படித்திருப்பதோடு குறைந்தபட்சம் வருடம் நன்கு பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும். இப்பதவிக்கு விண்ணப்பிப்போர் ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இந்த பயிற்றுநர் பதவிக்கு மாதம் தொகுப்பூதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். 




இந்த பயிற்றுநர் பதவியானது முற்றிலும் தற்காலிகமானது. இதனைக் கொண்டு எவ்வித முன்னுரிமையும் கோர இயலாது. பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளோர் தங்களது சுய விபரங்களை பூர்த்தி செய்து செப்.15ம் தேதிக்குள்
முதல்வர்,
அரசு தொழிற்பயிற்சி நிலையம்,
ராமநாதபுரம்


என்ற முகவரிக்கு அனுப்பலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment