(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 23, 2017

ரிசர்வ் பேங்க் பணி வாய்ப்புகள், நேர்காணல் இல்லாமல்!!

No comments :
இந்தியாவின் தலைமை வங்கி கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுகிறது. தற்போது இந்த கிளைகளில் உதவியாளர் (அசிஸ்டன்ட்) பணிக்கு 623 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சென்னையில் 15 பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக கான்பூர் லக்னோ கிளையில் 44 இடங்களும்புதுடெல்லியில் 47 இடங்களும்கவுகாத்தியில் 36 இடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 1-10-2017 தேதியில் 24 முதல் 28 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு ஆண்டுகளும்எஸ்.சி.எஸ்.டி. பிரிவினருக்கு ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.




ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து, 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

**இந்தப் பணிக்கு நேர்காணல் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.**

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.450 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் ரூ.50 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-11-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு 25-11-2017-ந் தேதிக்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rbi.org.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment