(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 23, 2017

இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு!!

No comments :
இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) பயிற்சி 85-86 சேர்க்கையின்படி, மதபோதகர் பணியில் இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பண்டிட் பிரிவில் 63 பேரும்,
பண்டிட் (கூர்கா) - 3 பேர்,
பத்ரி - 1,
மவுலவி - 2,
மவுலவி (ஷியா) - 1,
புத்த துறவி -1,
கிரந்தி - 2 பேரும் சேர்க்கப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் 1-10-2018 தேதியில் 27 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், குறிப்பிட்ட பிரிவு மதபோதகருக்கு அவசியமான கல்வித்தகுதி- சான்றுகளை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரமும், 77 செ.மீ. மார்பளவும் பெற்றிருக்க வேண்டும். 5 செ.மீ. விரிவடைய வேண்டும். 1600 மீட்டர் தூரத்தை 8 நிமிடத்தில் ஓடிக்கடக்கும் உடல்திறன் சோதனை நடத்தப்படும்.

சான்றிதழ் சரிபார்த்தல், எழுத்து தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 8-11-2017-ந் தேதியாகும்.


இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment