முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 4, 2017

ராமநாதபுர மாவட்டம் முழுதும் பரவலாக நல்ல மழை!!

No comments :
ராமநாதபுரத்தில் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. ராமநாதபுரம், கடலாடி, திருவாடானை,பரமக்குடி, போகலுார் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது.


இந்த மழையால் பூமி குளிர்ந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதுபோல் ஒன்றிரண்டு நாட்களாவது மழை பெய்தால் வெப்பம் தணிவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயரும், என மக்கள் தெரிவித்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)