முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 29, 2017

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு, ஏஐசிடிஇ அதிரடி!!

No comments :


இன்ஜினியரிங் படிப்பை மாணவர்கள் பாதியில் கைவிட்டால் அவர்களின் கல்வி கட்டணத்தை 7 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என அகில இந்திய தொழிற்கல்வி இயக்குநரகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஏஐசிடிஇ பிறப்பித்த உத்தரவு: 

மாணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேறினால், ரூ.1000 மட்டும் வசூலித்து கொண்டு அவர்கள் கட்டிய மிச்ச பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.



மாணவர்கள் பாதியில் வெளியேறினாலும், அவர்களிடம் எஞ்சிய பணத்தை வசூலிக்கக்கூடாது. மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட டிபாசிட் மற்றும் அவர்களின் சான்றிதழ்களை 7 நாட்களுக்குள் திருப்பி கொடுக்க வேண்டும்.

இந்த விதிகளை மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டண தொகையில் இரு மடங்கு வசூலிக்கப்படும். கல்லூரியில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.


இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)