முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 11, 2017

ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் ஊராட்சியில் 5 நாட்களாக நீடிக்கும் மின் தடை!!

No comments :
ராமநாதபுரம் யூனியன் மாடக்கொட்டான் ஊராட்சியில் மேலக்கோட்டை, ரமலான் நகர், இளமனூர், சாலை குடியிருப்பு, மாயாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. மேலக்கோட்டை மற்றும் ரமலான் நகரில் மட்டும் சுமார் 1200–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகள் அனைத்திற்கும் ஒரே ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்தே மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால் அதிக மின் பளு காரணமாக இந்த டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதாகி மின்தடை ஏற்படுகிறது. மேலும், இந்த பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக இந்த பகுதியில் தொடர்ந்து மின்தடை நீடித்து வருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் கிரைண்டர், மிக்சி, மின் விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.



இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
.
தற்போது கடந்த 5 நாட்களாக மின்சாரம் இல்லை. கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மின்விசிறி கூட இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், மின்வாரிய உயர் அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கூடுதலாக டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கவும், சீரான மின் வினியோகம் செய்து பொதுமக்களின் துயர் துடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பரமக்குடி நகரில் தேங்கும் குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை!!

No comments :
பரமக்குடி நகரில் தினமும் தேங்கும் காய்கறி, உணவு கழிவு குப்பைகளை கொண்டு மின்சாரம் மற்றும் கியாஸ் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தையில் ரூ.30 லட்சம் மதிப்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன. 

இதை சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒரு வருடத்திற்கு அதன் உற்பத்தியை மேற்கொள்ள செய்து, பின்பு நகராட்சி நிர்வாகத்திடம் பணிகளை ஒப்படைக்கின்றனர்.



அதில் இருந்து கிடைக்கும் கியாசை பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கும், மின் உற்பத்தியை அந்த பகுதியில் உள்ள தெரு மின் விளக்குகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து தயார் நிலையில் இருப்பதால் இந்த மாதம் இறுதிக்குள் இந்த திட்டம் தொடங்கப்பட்டு கியாஸ் மற்றும் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் நாராயணன், சுகாதார அலுவலர் சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது:

நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு நல்ல முறையில் இயங்குகிறது. அதன் மூலம் விவசாயிகளும், பொதுமக்களும் அதிக அளவில் பயன் பெற்று வருகின்றனர்.

தற்போது உணவு, காய்கறி கழிவு குப்பைகளை எந்திரத்தில் அரைத்து அதில் இருந்து கியாஸ், மற்றும் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. இந்த மாதம் இறுதியில் மின்சாரம், கியாஸ் உற்பத்தி பணிகள் தொடங்கும். இதன் மூலம் நகராட்சிக்கு அதிக அளவிலான பொருளாதாரம் மிச்சமாகும்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)