முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 15, 2017

துபாயில் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65 வது பிறந்தநாள் விழா!!

No comments :
துபாயில் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு துபாய் திமுக சார்பாக லத்திபா மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அன்பின் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார்.



இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமானோர் இரத்ததானம் செய்தனர்.
இதில் துபாயை சேர்ந்த இசா அல் கூரைர் சிறப்பு அழைப்பாளராகா கலந்து கொண்டு இரத்ததானம் செய்தார்.

இதில் அமீரகத்தின் திமுக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதை தொடர்ந்து மாலை 7 மணியளவில் தேராவில் உள்ள கிரேண்ட் எக்ஸல்சியர் ஹோட்டலில் நடந்த  மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவில் திரு. அன்பின் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரை ஆற்றினார்.

செய்தி: அஸ்கர் அலி
திமுக.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பாம்பன், நாகையில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!!

No comments :

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி உருவாகி பின்னர் அது காற்றழுத்த தாழ்வாக மாறியது. தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுபடிப்படியாக அடுத்த 2 நாட்களில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு உள்ளது.


இதை முன்னிட்டு நாகை, பாம்பன் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வானது. கடல் பகுதியிலேயே நிலை கொண்டு இருப்பதால் தரைப்பகுதியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.

இதன் காரணமாக வட தமிழகம் தெற்கு உள் கர்நாடகம் மற்றும் ராயலசீமா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம் உருவானால் தமிழகத்திற்கு மழை கிடைக்குமா, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்நடைகள் தேவைக்காவது நீர் ஆதாரம் பெருகுமா என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)